Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all 790 articles
Browse latest View live

பேய் - நரி - நாய் - நீ ! - கட்டுரை

$
0
0
       
              வாசிக்க   இணைப்பை திறக்கவும்...

     
                      http://kapaadapuram.com/?katturaigal_isai
                                                         

                                     

                                              நன்றி : கபாடபுரம் .காம்


இன்பவெறிக் கூச்சல்

$
0
0

         




வருத்தங்களை எண்ணிப்பார்த்தால்
எல்லாம் சரியாக இருக்கிறது.
பிறகு
என்ன எழவிற்கு இந்த மனம்
இப்படி
எம்பி எம்பிக் குதிக்கிறது.

இதன் இன்பவெறிக்கூச்சல் காதைக் கிழிக்கிறது.

ஒரு செடியைப் போல மரத்தை உலுக்கி
பூச்சொரிந்து கொள்கிறது.

தானே பந்து வீசி
தானே மட்டையடித்து
தானே விழுந்து பிடித்து விட்டு
பனியனைக் கழற்றிச் சுற்றுகிறது.

மண்ணிக்கீறி நுழையப் பார்க்கிறது
மலைக்கு மலை தாவப் பார்க்கிறது.

தன் உளுத்த பைக்கின் பிளிறலினூடே
நீளமான கண்டெய்னர் லாரியை
சைடெடுக்க   முனைகையில்
எதிர்ப்பட்டு விட்டதொரு பேருந்து.
இரண்டுக்கும் இடையேயான அந்த நூலிடைச்சந்தில்
அது படுத்து எழுந்து வெளியேறுகையில்
இந்த உலகம்
ஒரு முறை ஜோராக கைதட்டுகிறது.
                          
                  நன்றி : ஆனந்த விகடன்

இசையின் கவிதை வெளி - மனுஷ்யபுத்திரன் உரை

$
0
0





  https://soundcloud.com/prabhu-ramakrishnan-26064342/kavignar-manushyaputhiran-speech

எலும்புருக்கி

$
0
0
         

                    
 நீ அழைத்தது போலில்லை
நான் அழைத்தது போலில்லை
கூத்துமாக்கள் அழைப்பது போலில்லை
கதா விருந்துகளில் அபிநயப்பது போலில்லை
விஸ்வநாதன் அழைத்தது  போலவோ
கோவிந்தராஜன் அழைத்தது போலவோ இல்லை
இரவலர் நின்று அழைத்தது போலில்லை
புலவர்கள் ஏத்தியழைத்தது போலில்லை
முறுவல்கிருஷ்ணன் அழைத்தது போலில்லை
கதறி குந்தி அழைத்தது போலவும் இல்லை
எடுத்தோன்... கோர்த்தோன்... காத்தோன்
ஆரத்தழுவி 
அழைத்தோன் ஓர் அழைப்பு...
அது போலவும் இல்லை
க.................ர்.....................ணா.....”  என்று
ஒரு நாயனம் அழைத்தது

பேய்-நரி-நாய்-நீ

$
0
0
                                       



                                                       முன்குறிப்பு

   சங்கத்திலிருந்து சமகாலம் வரைக்கும் கவிதைக்குள் “விளையாட்டு“ எப்படி இயங்கிவந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் பேராசையில் நான் ஒரு நூல் எழுத முயன்றேன்.  கவிதைக்குள் எது விளையாட்டு  என்பதை வரையறுத்துக் கொள்வதே சிரமமான காரியமாக இருந்தது எனக்கு.  ஏனெனில் இரசம் மனத்துக்கு தக்க மாறும் என்பதே அறிஞர் கூற்று. எனவே நான் எனக்கான வரையறை ஒன்றை உருவாக்கிக் கொண்டேன். நகைச்சுவை, கேலி, பகடி, சுவாரஸ்யம், வினோதம் இவற்றுடன் ”பரிட்சார்த்த முயற்சி ” என்கிற ஒன்றையும் சேர்த்து நான் ”விளையாட்டு” என்று புரிந்து கொள்கிறேன். இவற்றில் சுவாரஸ்யம் ,வினோதம், பரிட்சார்த்த முயற்சி ஆகியவற்றுடன் கொஞ்சம் “துடுக்குத்தனமும்” சேர்ந்திருக்க வேண்டியது அவசியம் . இதுவே விளையாட்டு பற்றிய எனது வரையறையாகும்.
   நூலில் சிற்றிலக்கியங்கள் மற்றும் தனிப்பாடல்களைப் பற்றி எழுதியிருக்கும் பகுதி இங்கு கட்டுரை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
      ####

தொல்காப்பியம் சொல்லும் எண்வகை பெய்ப்பாடுகளுள் “நகை”  முதலில் வைத்து சொல்லப்பட்டிருந்தாலும் நமது சங்கப்பாடல்களில் “நகைச்சுவை”  அரிதினும் அரிதே. வேறு “விளையாட்டுக்கள்” உண்டெனினும் அதுவும் அளவில் குறைவுதான். பக்தி இலக்கியங்களில் நகையை எதிர்பார்க்க முடியாது தான் எனினும் அதில் கொஞ்சமாக “பழித்தல் பாவனைகள்”  உண்டு. நீதிநூல்கள் சிரிக்குமா? நீதியுடன் விளையாட முடியுமா என்ன ?
####
    தன் “சிற்றிலக்கியங்கள்”  நூலில் சிற்றிலக்கியங்கள் மொத்தம் ஆயிரம் தேறும் என்று சொல்கிறார் நாஞ்சில்நாடன். சுமார் 80 நூல்களை மட்டுமே தான் பார்வையிட்டிருப்பதாக சொல்கிறார்.  சிற்றிலக்கியங்களில் கூட வாய்விட்டு சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவை இருக்குமா  என்பது சந்தேகமே. சிங்கன்- சிங்கி ,பள்ளன்- பள்ளி ஆகியோர் இடம் பெற்றிருக்கும் போதிலும், இங்கும் பாட்டுடைத் தலைவனாக இருப்பது கடவுளோ, அரசோதான். குற்றால குறவஞ்சி, முக்கூடற் பள்ளு போன்றவற்றில் கொஞ்சமாக கேலிப்பேச்சுககள் உண்டு.  சுமார் 80 சிற்றிலக்கியங்களை அறிமுகப்படுத்தும் நாஞ்சிலாரின் நூலில் கூட ரசமான பகுதிகள் உண்டே ஒழிய நகைச்சுவை உணர்ச்சி  வெளிப்பட்டிருக்கும் இடங்கள் குறைவே. அந்த நூல்களிலேயே நகைச்சுவை கிடையாதா அல்லது  நாஞ்சிலார் எடுத்தியம்பும் பகுதிகளில் அது இல்லாமல் போய்விட்டதா என்பது தெரியவில்லை. ” மேக விடு தூது, ”அன்ன விடு தூது”, ”நெஞ்சு விடு தூது’  போல “புகையிலை விடு தூது”, ”பணம் விடு தூது” ஆகியவற்றையும் அறிமுகம் செய்திறது நாஞ்சிலின் புத்தகம். இது போன்ற குசும்புகளில்  ”நகை’  உண்டா என்பது மூலத்தை பார்த்தால் தான் தெரியும்.
“வானுறு மதியை அடைந்ததுன் வதனம்/ மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி…” என்று ஆறுமுக வாத்தியார் பாடும் ‘ராகத்தில்’ மயங்கித்தான் ”நந்திக்கலம்பகத்தை” வாசித்தேன்.  இது நந்திவர்மன் இறந்த போது பாடப்பட்ட கையறு நிலைப்பாடல்.. விளக்கவுரை அவசியமில்லாதது..
"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே!"

   ( தேனுறு மலராள் – திருமகள் )


நந்திக்கலம்பகத்திலிருந்து ஒரு சுவையான  கேலிப்பாடல் நினைவில் எழுகிறது…
தலைவன் பரத்தையிடம் சென்று இல்லம் திரும்புகையில் தலைவியின் கோபம் தணிப்பதற்காக பாணனை தூது விடுகிறான். அப்படி தூது வந்த பாணனிடம் சொன்ன தலைவியின் கூற்று இப்பாடல்..
“ ஈட்டுபுகழ்  நந்திபாண நீ எங்கையர்தம்
 வீட்டிருந்து பாட விடிவளவுங்- காட்டில் வாழும்
 பேய் என்றாள் அன்னை/ பிறர் நரி என்றார் /தோழி
 நாய் என்றாள்/ நீ என்றேன் நான்.

“நந்திவர்மனின் பாணா, நீ எம் தங்கையான பரத்தையின் வீட்டில் இருந்தபடி விடிவளவும் பாடிய பாடல்களை கேட்டோம்…அதைக் கேட்டு காட்டில் வாழும்பேய் என்றாள் அன்னை. பிறர் நரி என்றார். தோழி நாய் என்றாள். நீ என்றேன் நான்.”
வித்வான்கள் “கலிங்கத்துப்பரணியை” வியப்புச்சுவையும், நகைச்சுவையும் கொண்டது என விளக்குகிறார்கள். வியப்புச்சுவை நூல் முழுக்கவே உண்டு . அதில் மாற்றுக்கருத்தில்லை. நகைச்சுவை என்று உரையாசிரியர்கள் சொல்வது இதில் இடம் பெற்றிருக்கிற பேய்கள் அடிக்கும் கூத்தைத்தான் என்று நினைக்கிறேன். பேய்களின் உருவம் பற்றிய அதீத அச்சமூட்டும் வர்ணனைகளும், களத்தில் அவை நிணக்கூழடுக்கும் காட்சிகளும் இதில் பேசப்படுகின்றன. இந்த வர்ணனைகளிலும், கூழடுத்தலிலும் நகைச்சுவையும் விரவி இருப்பதைக் காண்கிறோம். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பே  பேய்களை இவ்வளவு விரிவாக சித்தரித்திருப்பது ஆச்சர்யமளிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் இன்று இவை ”விட்டலாச்சார்யா” நகைச்சுவைகள்தான். விட்டலாச்சார்யார் படங்களைப் பார்த்தால் யார்யாருக்கு சிரிப்பு வருமோ அவர்கள் இங்கேயும் சிரிக்கலாம். ஜெயங்கொண்டாராவது களத்தில் கிடக்கும் அம்பு, வில், தடி முதலியவற்றை விறகாக்கி பேய்கள் அடுப்பு மூட்டியதாக சொல்கிறார். விட்டலாச்சார்யா பேய்களின் கால்களையே விறகாக்கி அதிசயிக்கவைத்தார்.  கூடவே சிரிக்கவும் வைத்தார்.  க.பரணி வாசிப்பில் என் இதழ்கள் லேசாகத்தான் முறுவலிக்கின்றன.... கண்களே அகல விரிகின்றன..
       
     க.பரணி - பேய்களைப் பாடியது

“ பாந்தள் நால்வன போலும் உடல் மயிர்
  பாசி பட்ட பழந்தொளை மூக்கின
  ஆந்தை பாந்தியிருப்ப, துரிஞ்சில் புக்கு
  அங்குமிங்கும் உலாவு செவியன.
( பாந்தள் நால்வன போல- பாம்புகள் தொங்குவது போன்ற,  துரிஞ்சில்- வெளவால் வகை)

          க.பரணி – களம்பாடியது – நிணக்கூழ் அடுதல்
பேய்கள்  பல் விளக்கி, நகம் திருத்தி, எண்ணெய் முழுகி , அணிகலன் புனைந்து கூழ் சமைக்க துவங்குவது முதல்,  சாப்பிட்டு முடித்து வெற்றிலை பாக்கு போடுவது வரை விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. யானைத் தந்ததால் பல் துலக்கி அதன் விலா எலும்பால் நாக்கை வழித்துக் கொண்டு, வெண்மூளையை எடுத்து  எண்ணெய்யாக தேய்த்துக் கொள்கின்றனவாம்.

பறிந்த மருப்பின் வெண்கோலால்
பல்லை விளக்கிக் கொள்ளீரே
மறிந்த களிற்றின் பழுஎலும்பை
வாங்கி நாக்கை வழியீரே !
  ( மருப்பு- யானை தந்தம், பறிந்த மருப்பு – போர்க்களத்தில் உடைந்து கிடக்கிற தந்தம், மறிந்த- மரித்த, பழுஎலும்பு- விலா எழும்பு)

வாயம்புகளாம் உகிர்கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே
பாயும் களிற்றின் மதத்தயிலம் பாயப் பாய வாரீரே !
( உகிர்- நகம், உகிர்கொள்ளி – நகம்களையும் கருவி, வாய் அம்பு – அம்பின் வாய் அதாவது முனை,  மதத்தயிலம்- யானையின் மதநீர், அதை எண்ணெயாக பூசிக்கொள்வீராக !)

எண்ணெய்போக வெண்மூளை
என்னுங் களியான் மயிர் குழம்பிப்
பண்ணையாகக் குருதிமடுப்
பாய்ந்து நீந்தி யாடீரே !

பூசிக்கொண்ட மதநீர் எண்ணெய் போகுமாறு வெண்மூளை என்னும் களி மண்ணால் மயிர் குழப்பி கூட்டமாக குருதிமடுவில் குதித்து ஆடீரே!
          ( பண்ணையாக – கூட்டமாக )

        பேய்கள் உண்ணுதல்

மென்குடர் வெள்ளை குதட்டீரே
மெல்விரல் இஞ்சி அதுக்கீரே
முன்கை எலும்பினை மெல்லீரே
மூளையை வாரி விழுங்கீரே

             
            வெற்றிலை பாக்கிடுதல்

 பண்ணும் இவுளிச் செவிச்சுருளும்
 பரட்டிற் பிளவும்
 படுகலிங்கர் கண்ணின் மணியிற் சுண்ணாம்பும்
 கலந்து மடித்துத் தின்னீரே!
        ( இவுளி – குதிரை,  பரடு –கால் குளம்பு)


( குதிரைகளின் செவிச்சுருளை வெற்றிலையாக்கி, அதன் குளம்பு துண்டங்களை பாக்காக்கி ,  களத்தில் இறந்துகிடக்கும் வீரர்களின் கண்ணின் மணியை சுண்ணாம்பாக்கி தின்னுங்கள் )

 ”பிள்ளைத்தமிழ்” என்பது ஒரு விதத்தில் தூது இலக்கியமும் கூட.  இதில் பாடும் புலவன் பாடப்படும் தலைவனிடம் தன் நெஞ்சை தூது விடுகிறான். “ ஐயா… பார்த்து ஏதாவது செய்யுங்கள்“ என்பதுதான் இதன் துறைவிளக்கம். சிற்றிலக்கியங்களில் காக்காய் பிடிக்க ஏதுவான பிள்ளைத்தமிழ்,  உலா போன்றவை மட்டுமே சமகாலத்திலும் எழுதப்படுவதாக சொல்லும் பெருமாள்முருகன் தன் “வான்குருவியின் கூடு” நூலில் “சிட்டநாதன் பிள்ளைதமிழ்” என்கிற நூல் ஒன்றை அறிமுகம் செய்கிறார். புகழ்ந்துரைத்துப் பாடுவதே பிள்ளைத்தமிழின் பொது இலக்கணம். இது விதிவிலக்காக பழித்துப் பாடிய பிள்ளைத்தமிழாக இருக்கிறது. எனினும் இதன் வரிகளை  ரசிக்க இயலவில்லை. இவை  கேலி என்பதைத் தாண்டி முற்றியவன்மத்தின் சொற்களாக இருக்கின்றன.

    தமிழ்க்கவிதையின் பெருவிளையாட்டுகள் நிகழ்ந்தேறிய இடம் என்று “தனிப்பாடல்களை” சொல்லலாம். இவை அது வரையுமான கவிதைகளின் இறுக்கத்தை தளர்த்திய போதும், கவிதையை “வெற்றுச் சுவைப்பண்டங்களாக” ஆக்கி விடவும் பார்த்தன.  தனிப்பாடல் திரட்டை பிரமாதமான கவிதைகளின் தொகுதியென்றும் , சொற்சிலம்பாட்டத்தின் தொகுதியென்றும் வாசிப்பு வசதிக்காக இரண்டாகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் வகையையே நான்  பொருட்படுத்த விரும்புகிறேன்.  இரண்டாவது வகையினம் சமத்காரமானது.  சிலேடை, இரட்டுற மொழிதல் போன்ற இலக்கணங்களை வைத்துக் கொண்டு கிளுகிளுப்பூட்டியவை இதன் பாடல்கள். இவைகளுக்கு இன்று ”கவிதை அந்தஸ்து” கிடையாது.. ” காளமேகம்” இவ்விளையாட்டுக்களின் நாயகன். தென்னை –வேசி,  வெற்றிலை- வேசி, பூசணிக்காய்- சிவபெருமான் , ஓடம் –அல்குல்  என  அவர் போட்ட சிலேடைகள் விபரீதமானவை.
               ஓடம்- அல்குல்
பலகையிடுமுள்ளே பருமாணி தைக்கும்
சலம் இறைக்கும் ஆள் ஏறித்தள்ளும் – உலகு அறிய
ஓடமும் ஒன்றே உலகநாதன் பெண்டீர்
மாடமும் ஒன்று என்றே மதி.

“நல்ல குடும்பத்தில்” பிறந்த வளர்ந்த நான் இப்பாடலுக்கு பொருள் சொல்ல விரும்பவில்லை.
இராசிகளை செய்யுளிள் அமைத்து பாடியது, மாதங்களை செய்யுளில் அமைத்து பாடியது, ”செருப்பு” எனத் தொடங்கி ”விளக்குமாறு” என்று முடிப்பது போன்ற விளையாட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு சுவாரஸ்யமானவை. ஒரு தீவிர கவிதை வாசகன் முன் இவை என்ன பொருள்படுகின்றன என்பது சிக்கலான ஒரு கேள்வி. அப்படியான ஒரு பாடல்..

பூநக்கி ஆறுகால்: புள்இனத்துக்கு ஒன்பதுகால்:
ஆனைக்குக் கால் பதினேழானதே _ மானே கேள்
.............................................................................
......................................................................................
பூநக்கி என்பது வண்டு. அதற்கு ஆறு கால்கள் தானே? புள்ளினத்துக்கு ஏது ஒன்பது கால் என்றால்,  9 ஐ 1/4  ஆல் பெருக்கினால் கிடைப்பது இரண்டு . எனவே புள்ளினத்துக்கு இரண்டு கால்கள் . அதெப்படி 8 ஐ 1/4 உடன் பெருக்கினால் தானே இரண்டு வரும்?  நான் 10-ஆம் வகுப்பு கணக்கு தேர்வில் 39 மதிப்பெண் பெற்று  கடைத்தேறியவன். கணக்கின் முகத்திலேயே விழிக்க கூடாது என்பதற்காகவே ”pure science “ படிப்பைத் தேர்ந்தெடுத்தவன்.   இந்த ”கணக்கிற்கு” விடை காணும் முன் தலை கிறுகிறுத்து விட்டது. அதாவது இரண்டு கால்கள் இல்லையாம். இரண்டே காலாம்.அதாவது இரண்டும் ஒரு காலும் . ( 2+ 1/4). இது போலவே யானையின் நாலு காலும். (4+ 1/4).  உங்களுக்கு கோபம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...
நான் ”விளையாட்டு” என்கிற பதத்தால் விளிப்பது இது போன்ற அற்ப சொல்லாட்டங்களையல்ல. அதாவது செய்யுளின் சப்த கணக்காட்டங்களையல்ல. கவிதையின் ஆன்மாவுள் நிகழும் விளையாட்டை தரிசிப்பதே என் ஆசை.
பக்தியிலக்கியங்களைப் போல் நயமான கேலிகளாக இல்லை காளமேகத்தின் கேலிகள். அவை மூர்க்கம் கொண்டவை. சாதாரண மனிதர்களையும் சர்வவல்லைமை பொருந்திய கடவுளர்களையும் ஒரே தட்டில் வைத்து நோக்குபவை. ஒரு தாசிக்கு எத்தொனியோ அத்தொனிதான் தசரதன் மைந்தனுக்கும். நமது இறையியலாளர்கள் ”நிந்தாஷ்துதி“ என்கிற ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். அதாவது நிந்தனையில் துதிப்பதாம். காளமேகம் ”நிந்தாஷ்துதி” பாடியவர் என்பதே அவர்கள் தரப்பு. இது குறித்து பெருமாள் முருகன் சொல்லும் ஒரு கருத்து முக்கியமானது.
 ”எப்பேர்பட்டவர்களையும் தன்னுடைய வரம்புக்குள் கொண்டுவந்து நிறுத்துவிடும் சாகச குணமுடையது நம்சமூகம். அதுவும் மீறல்களைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் தந்திரத்தை திட்டமிட்டே கையாளக்கூடியது.... காளமேகத்தின் ஏளனத்திற்கும் கேலிக்கும் அதிகமும் ஆளானவர்கள் மனிதர்கள் அல்லர்: கடவுளர்கள் தான். கடவுள் பற்றிய சிறு அச்சமும் அற்ற மனம்தான் இப்படிப் பாடமுடியும்.அவனது இந்த இயல்பை “நிந்தாஷ்துதி” என்கிற கோட்பாட்டை கொண்டுவந்து நிறுத்தி உள்ளிழுத்துக்கொண்டிருக்கிறது நம் மரபு” .  
    இந்த இடத்தில் எனக்கொரு சந்தேகம். நிந்தாஷ்துதி காளமேகத்திடமிருந்து தப்பிக்க கடவுள்களுக்கு உதவியதா? அல்லது அடியார்களிடமிருந்து தப்பிக்க காளமேகத்திற்கு உதவியதா?  ஒரு வேளை 15 –ம் நூற்றாண்டு அடியார்கள் நிஜமாலுமே சாதுக்கள் போல ?
   இன்றைய சூழலில் காளமேகத்தின் நான்கு பாடல்களை ஒரு பொது இடத்தில் வாய்விட்டு வாசிப்போமெனில் ஊர் போய் சேர்வது சிரமம்.
    பரமசிவன் இரந்துண்ணும் ஏழையாக இருப்பதால் என்னென்ன நடக்கின்றன என்று பாருங்கள்…
       “தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ
 பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ – மீண்டொருவன்
 வையானோ வில்முறிய மாட்டானோ /  தென்புலியூர்
 ஐயா ! நீ ஏழையானால்.
( முதல் வரியில் உள்ளது கங்கா, இரண்டாவது வரியில் இருப்பது கண்ணப்பன், மூன்றாம் வரி அர்ச்சுணனுக்கானது)

தன் வினை தீர்க்க முடியாதவர் நம் வினை தீர்ப்பாரோ?
   
       “வாதக்காலாம் தமக்கு ;  மைத்துனர்க்கு நீரிழிவாம் ;
        பேதப் பெருவயிராம் பிள்ளை தனக்கு – ஓதக்கேள்
        வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர்
        எந்தவினை தீர்ப்பா ரிவர்.
(அம்பலத்தரசைத் தான் வாதக்கால் நோயாளி ஆக்கிவிட்டார் காளமேகம். வாதக்கால் கண்டவர்களால் தானே ஒழுங்காக ஓரிடத்தில் நிற்க முடியாது. திருமால் பாற்கடலில் நீர்மிசை கிடப்பதால் அவருக்கு நீர் இழிவாம் )
சத்திரங்களில் உண்டுறங்கி நாடோடியாக அலைந்து திரிந்த அவர் ஒரு சத்திரத்தைப் பற்றிப் பாடியது.  இது நாகப்பட்டினத்து ”காத்தான்” என்பவனின் சத்திரம்...
 கத்துகடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
 அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி
 உலையில் இட ஊர் அடங்கும்: ஓர் அகப்பை அன்னம்
 இலையில் இட வெள்ளி எழும்.

இது நாகப்பட்டினத்து தாசியை இகழ்ந்தது…

   வாழ்த்து திருநாகை வாகான தேவடியாள்
   பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள்- நேற்றுக்
   கழுதை கெட்ட வண்ணான் ,  கண்டேன் ! கண்டேன் என்று
   பழுதை எடுத் தோடி வந்தான் பார்.
   (கழுதை கெட்ட  – கழுதையை தொலைத்த , பழுதை – கயிறு  )
 
   என்னதான் காளை வாகனனாக இருந்தாலும்” அக்காளை ஏறினாராம்..”      என்றெழுதுவாயோ காளமேகா?
    காளமேகம் தனிப்பட்ட முறையில்  எப்பவும் எனக்கொரு தலையிடி. அவரை கவியென்று ஏற்பதா வேண்டாமா என்கிற குழப்பதிலிருந்து உருவாவது இந்த தலைநோவு. ஆனால் உறுதியாக புரட்சிக்காரன் என்று ஏற்றுக்கொள்வேன். அவரை கவிஞராக்க அதிகமும் மெனக்கெட வேண்டி இருக்கிறது. “மும்மதத்து வாரணத்தை, ஐயோ எலி இழுத்துப் போகிறது ஏன்?” என்கிற வரி” எல்லாம் வல்லவன் என்று ஏத்தப்படும் கடவுளை ,  அற்ப சுண்டெலி ஒன்று இழுத்துப் போகிறதைப் பார்” என்று சொல்கிறது.  இவ்வரிக்கு இன்று கவிதை மதிப்பு இருப்பதாக நான் நம்பவில்லை.  இருப்பது கலகமதிப்பு தான். அதுவும் காலம் சார்ந்தது தான்.  இவ்வரியை இன்றைய ”விநாயகர் சதுர்த்தி”  ஊர்வலங்களின் பதட்டங்களுக்கு எதிராக வைத்து வாசிக்கலாம். அதைக் காளமேகத்தின் காதலர்கள் செய்யலாம்.
   தனிப்பாடல்களில்  நெஞ்சோடள்ளிக் கொள்ளவும் நிறைய கவிதைகள் உண்டு. சில கவிதைகளில் பிரமாதமான விளையாட்டுகளும் உண்டு. அதில் சிலவற்றை பார்க்கலாம். ”ஒப்பிலா மணிப்புலவரின்”  இரண்டு பாடல்கள்... இரண்டும் தோள்தோய் காதலர் பிரிந்திருக்கும் ராத்திரியின் நீளம் குறித்து சினந்து உரைக்கும் தலைவியின் கூற்றுக்கள். தாளாவொண்ணா பிரிவுத்துயர்தான் ஆனாலும் அதை வெளிப்படுத்தி இருக்கும் விதத்தில் ஒரு துடுக்குத்தனம் வெளிப்படுகிறது. இரவி வந்து தொலைய மாட்டேன் என்கிறான்.. இராத்திரி விடிந்து தொலைய மாட்டேன் என்கிறது.

ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? யான் வளர்த்த
கோழி வாய் மண்கூறு கொண்டதோ- ஊழி
திரண்டதோ/ கங்குல் தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத்துள்.

  (ஆழிவாய் என்கிற அசாதாரணத்தையும்,  கோழி வாய் என்கிற சாதாரணத்தையும் அருகருகே வைத்திருப்பது  எண்ணி எண்ணி இன்புறத்தக்கது. “ எண்ணி எண்ணி இன்புறத்தக்கது..” என்கிற சொற்றொடரை நமது கல்விப்புலம் சார்ந்த புத்தகங்களில்  அடிக்கடி கண்டிருக்கிறேன். ”நல்லா இருக்குன்னு சொல்றார்..”  என்று  புரிந்துகொண்டு  கடந்து விடுவேன்.  ஆனால்  “எண்ணி எண்ணி இன்புறத்தக்கது என்றால் என்ன ? என்பது இப்பாடலைப் படிக்கையில் புரிகிறது. )

 (ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ-  கடல் போல் கொந்தளிக்கிற இரவாம்,  கங்குல் – இரவு , தேர்- சூரியத்தேர் )

அரவங் கரந்ததோ! அச்சுமரம் இற்றுப்
புரவி கயிறுருவிப் போச்சோ! இரவி தான்
செத்தானோ இல்லையோ! தீவினையோ!  பாங்கி, எனக்கு
எத்தால் விடியும் இரா.
        (அரவம் கரந்தது சூரியனை , அச்சுமரம் சூரியத்தேரினுடையது)
  மதுரை கண்ணனாரின்  ஒரு சங்கப்பாடலில் , தலைவனுடன் களித்திருக்கும் இராத்திரியை கூவியதன் மூலம்  சீக்கிரமே விடிய வைத்து விட்டதற்காக , அச்சேவலை பூனைக்கு பிடித்துதரப்போவதாக  மிரட்டுகிறாள் ஒரு தலைவி.  இங்கோ சீக்கிரம் கூவித்தொலைக்காமல் அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. என்று மிரட்டுகிறாள் இன்னொரு தலைவி . தலைவிகளுக்கும் சேவல்களுக்கும் ஜென்மப்பகை போலும்?
         
    ஊடலை ஆற்றமாட்டாத ஒரு தலைவன் பாடியது…

     “ உனக்கின்று யான் செய்த குற்றமொன்று இல்லை
                                           உனைப் பிரிந்தால்      
    வனக்குன்றிலேறி விழ அறியேன்; வண்மை சேர் மயிலே
    எனக்கென்று வட்டமிட்டு அண்ணாந்து விம்மி யிருக்கும் உந்தன்
    தனக்குன்றில் ஏறி விழுவேன் நின் அல்குல் தடாகத்திலே
                                           ( பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் )

       
      நங்கை ஒருத்தியையும் நாமிருவர் மூவரையும்
      பொங்கு அமளி பொறுக்குமோ
      சங்கம் குலைய விரால் பாயும் குருநாடர் கோவே
      பழையவரால் என்ன பயன்.
                                               ( சொக்கநாதப்புலவர் )
     படுக்கையில் இருக்கும் தலைவனுக்கு பரத்தையின் மேல் நினைப்பு போகிறது. இதை அறிந்து கொண்ட தலைவி பாடியது மேற்கண்ட பாடல்.  நான், நீ , அவள் மூன்று பேரையும் இந்தக் கட்டில்  தாங்குமோ? என்று கேட்கிறாள். ”சங்கம் குலைய விரால் பாயும்” என்பதை ”நான் குலைய பரத்தை பாய” என்றும் வாசிக்கலாம்.  அம்மணி, இப்படியெல்லாம் கணக்குப் பார்த்தால் பூதலத்தில் கால்வாசி கட்டில்கள் கூட மிஞ்சாது?
        என் உள்ளம் கவர் பாடல் ஒன்று.. புலவன், காளத்தி என்கிற வள்ளலைக் காணப்போகிறான். அவனைக் கண்ட மாத்திரத்தில் வறுமை இவரை விட்டு ஓடிவிடுமாம்.. இத்தனை நாளும் உடனிருந்த வறுமையை அப்படி சட்டென பிரியக்கூடுமோ?
நீளத்திரிந்துழன்றாய் நீங்கா நிழல்போல
நாளைக் கிருப்பாயோ நல்குரவே – காளத்தி
நின்றைக்கே சென்றாக்கால் நீயெங்கே நானெங்கே
இன்றைக்கே சற்றே யிரு.
                                  (மதுரகவிராயர் )
            ( நல்குரவு – வறுமை)    
இதற்குப் பெயர்தான்  “ஏழைக்குசும்பு” போலும் ?  “பட்டினிக்கொழுப்பு” போலும்?
 
                                                 நன்றி : கபாடபுரம் இணைய இதழ்
         

அவ்வளவுதான்

$
0
0
பாத்ரூமென்றால் அப்படித்தான்
எப்படி கழுவினாலும் அழுக்கு நீங்காது
எவ்வளவு நறுமணமூட்டினாலும்
நாற்றம் போகாது


சோப்பென்றால் அப்படித்தான்
எவ்வளவு கவனமாக இருந்தாலும்
கைகளில் நிற்காது


நாமென்றால் அப்படித்தான்


நழுவி கீழே விழுந்து விட்டால்
எடுத்து
ஐந்துவிநாடிகள் ஓடும்நீரில் காட்டிவிட்டு
தொடர்ந்து  தேய்க்க வேண்டியதுதான்

சும்மா

$
0
0

                               





ஒரு செய்தியும்  இல்லாதவன்
விசேஷம் ஏதும் அற்றவன்
காரியமொன்றும் ஆற்றாதவன்
பொந்தில் கிடக்க வேண்டும்
ஆனால்
அவன் ஒரு செயல்வீரனை அழைத்து விட்டான்
“என்ன விசேஷம் ...?  " 
என்கிற கம்பீரத்திற்கெதிராய்
“ சும்மா...ஒரு ப்ரியம்... ” என்ற சொல்லவந்தவன்
“சும்மா... ” என்று சொல்லிவைத்தான்.

பச்சையம்

$
0
0
                       


ஒரு மேட்டு வீட்டைக் காட்டி
'அந்த வீட்டு ஆள் ஒரு கொலைகாரன்
என்றார்கள்.
கூரைமட்டும் கொஞ்சமாய்  வெளித்தெரிய 
மற்றதனைத்தும்
பச்சையால் மறைக்கப்பட்டிருந்தது.
கூரை மீதும் பச்சை ஏறியிருந்தது.
'அதுவும் இரட்டைக்கொலை என்றார்கள்
அதிலும் ஒரு பெண்...
அதுவும் வன்புணர்ந்து...
"அந்த வீடா... ?அந்த வீடா ... ? "என்று திரும்ப திரும்பக் கேட்டேன்.
பச்சையே.... பச்சையே...
உன்னால் நெஞ்சில் ஏற ஏலாதோ?


                                                 நன்றி : உயிர்மை -  செப்- 2016

பச்சையம்

$
0
0
                                     


ஒரு மேட்டு வீட்டைக் காட்டி
”அந்த வீட்டு ஆள் ஒரு கொலைகாரன் “ என்றார்கள்.
கூரைமட்டும் கொஞ்சமாய்  வெளித்தெரிய
மற்றதனைத்தும்
பச்சையால் மறைக்கப்பட்டிருந்தது
கூரைமீதும்  பச்சை ஏறியிருந்தது
” அதுவும் இரட்டைக் கொலை “ என்றார்கள்
அதிலும் ஒரு பெண்...
அதுவும் வண்புணர்ந்து ...
அந்த வீடா... ?
 அந்த வீடா ... ?
என்று திரும்ப திரும்பக் கேட்டேன்
பச்சையே ... பச்சையே...
உன்னால் நெஞ்சில் ஏற ஏலாதோ ?

                                                              நன்றி ; உயிர்மை செப்-2016




வல்லதே !

$
0
0
       



எல்லாம் வல்லதுவே...
எல்லாம் வல்லதைப் போன்ற அரசே...
அரசைப் போன்ற காதலியே...

நான் உன் விளையாட்டுச் சாமானம்தான்
ஆயினும்,
அவ்வளவு வேகமாக சுவற்றில் அடிக்காதே.


                   நன்றி : உயிர்மை - செப் -2016

சிக்கெனப் பிடித்தல்

$
0
0
                           
             

 பிரச்சனை
” சிக்கெனப் பற்றுதலில் “ தான் இருக்கிறது.
நல்லவேளையாக வாதவூரனுக்கு
 உடைந்த மதியும், ஊரும் பாம்பும் 
கிடைத்து விட்டன.
அவன் அதைப்பற்றிக்கொண்டு  கதிமோட்சம் கண்டான்.
கச்சவிழ்ப்பின் வழியே வீட்டுலகம் அடைந்தவர்களை
அவன் அங்கு சந்தித்தான்.
சிக்கெனப்பற்றப்படும் எதுவும்
யாரையும் கைவிட்டு விடுவதில்லை.
எவ்வளவு முயன்றும்
எப்படிப் புரண்டும்
எதையும் பற்றிக்கொள்ள இயலாதவர்கள்
கடைசியாக
தாம்புக் கயிறு வாங்கிவர
வேகமாக கிளம்புகிறார்கள்.
ஆகத்துயரம் என்னவெனில்
அவர்களில் பலருக்கு
அதுவும் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

யாரினும் யாரினும் ?

$
0
0
                  
                                  

     
   இந்த நூலிற்காக ‘காமத்துப்பாலை” மறு வாசிப்பு செய்கையில் “தமிழுக்கும் அமுதென்று பேர்”என்கிற வரி அடிக்கடி நினைவில் வந்து சென்றது.ஒவ்வொரு பாடலைப் படித்து முடித்ததும் புத்தகத்தை மூடி வைத்து விட்டு எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தேன். வாய் விட்டு “கெட்ட வார்த்தை” சொன்னேன். எங்கள் ஊரில் “ ஆளையும் பாரு.. வேலையும் பாரு...” என்று சொல்வார்கள். அதாவது ஆள் ஒரு மாதிரியும் அவன் செய்யும் வேலைகள் வேறு மாதிரியும் இருந்தால் இப்படி கேலி பேசுவார்கள். நமது பள்ளிக்கூடங்களில் ,பேருந்துகளில்  காலான்டர்களில், கடலோரத்தில் என  எங்கெங்கும் நாம் சிலையாக்கி நிறுத்தியிருக்கும்  அந்த “தவமுனி கோலத்து” ஆசாமி தானா இந்தப் பாடல்களையெல்லாம் எழுதியது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சில பாடல்களைப் படித்த உடனே பரவசம் தாளாது நண்பர்களுடன் போனில் பகிர்ந்து கொண்டேன்.

   “ வேற் கண்ணள் கோல் கண்ணள்” ஆகி விடுவாள்என்று இளமை நிலையாமை பேசுகிறது நாலடியார். வள்ளுவரும் நிலையாமை,அவா அறுத்தல், துறவு என்றெல்லாம் பேசத்தான் செய்கிறார்,

  “ தலைப்பட்டார்  தீரத் துறந்தார்/ மயங்கி
   வலைப்பட்டார் மற்றை யவர் “   
                                   என்று துறவு  பேசுகிறார்

   ஆனால் அவரே காமத்துப்பால் முழுக்க வலைப்படுதலின் ஆனந்தத்தை எழுதி எழுதி தீர்க்கிறார். உரை சொல்லவே இயலாமல் கணினியின் முன்னே என்னை செயலற்று அவர வைத்த கவிதைகள் இவை.

  நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
  தானை  கொண்டு அன்னது உடைத்து.
                                                
  தலைவனின் நோக்குகுக்கு அவள் எதிர்நோக்கு நோக்கினாள். அது வருத்தும் அணங்கு தன் படையோடு வந்து தாக்கியது போல் இருந்ததாம்.  அணங்கு வருத்தினாளே தாங்க இயலாது அது படை திரட்டி வேறு வந்தால்... 

     நீங்கின் தெறுஉம் குறுகும்கால் தண் என்னும்
    தீயாண்டுப் பெற்றாள் இவள்

         நீங்கினால் சுடும் : நெருங்கினால்  தண் என்னும் தீ அவள்

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

         அனிச்ச மலரும், அன்னத்தின் இறகும் அவள் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று/ நின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை     

செல்லமாட்டேன் என்பதை மட்டும் என்னிடம் உரை: மற்றது ,  நீ வரும் போது யார் உயிரோடு இருக்கப்போகிறார்களோ  அவர்களிடம் உரை. என்னிடம் உரைத்துப் பயனில்லை. 


கரத்தலும்  ஆற்றேன் இந்நோயை / நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

இந்நோயை மறைக்கவும் இயலாது வருந்துவேன். நோய் தந்தவனிடம்,  இது நீ தந்தது என்று உரைக்கவும் இயலாது நாணுவேன். சொல்லவும் கூடாது. மறைக்கவும் இயலாது.

விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் / கொண்கண்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு.

 விளக்கு அணையும் நொடியை எதிர்பார்த்து நிற்கிறது இருள்,  அடுத்த கணம் தான் விரவி நிறைவோம் என.  தலைவன் நீங்கின், மறுகணம் தான் ஊர்ந்து படர காத்து நிற்கிறது பசலை.

துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி/ விழிக்குங்கால்
நெஞ்சத்தார் ஆவர் விரைந்து.

துஞ்சும் போது என் தோள் மேல்தான் இருக்கிறான் தலைவன். அவனைக் காணும் ஆவலில் விழித்தால் நெஞ்சிற்குள் ஓடி ஒளிந்து கொள்கிறான்


காலைக்கு செய்த நன்று என்கொல், எவன்கொல் யான்
மாலைக்கு செய்த பகை

  இப்படி என்னை ஓயாமல் வருத்தும் இந்த மாலைக்கு நான் செய்த பகைதான் என்ன?  வருத்தாத காலைக்கு செய்த நல்லது தான் என்ன ?


காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்.

காலையில் அரும்பி  பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் இப்பசலை நோய்.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு.

முகைமொக்குள் உள்ளது ஒரு நறுமணம். அது போலே அவள் நகைமொக்குள் உள்ளது ஒரு குறிப்பு.

உள்ளக் கழித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு

காதலியை நினைந்தாலே இன்பம். கண்டாலே இன்பம். இது காமத்திற்கு மட்டுமே உற்றது. கள்ளிற்கு அற்றது.

ஊடற்கண் சென்றேன் மன் தோழி அது மறந்து
கூடற்கண் சென்றது என் நெஞ்சு

  நான் தலைவன் மேல் கோபத்தில் இருந்தேன். ஆகவே அவரைக் காண்கையில் ஊடவே நினைத்தேன். அந்தோ! அது மறந்து கூடச்சென்றது பாருங்கள்  என் நெஞ்சு.



                                                    




   
   திருக்குறளின் 132 வது அதிகாரம் புலவி நுணுக்கம்எனறு தலைப்பிடப்பட்டிருக்கிறது. புலவி எனில் ஊடல். ஊடலே ஒரு விளையாட்டுத்தானே? புலவியது நுணுக்கம்என்று விரியும் என்கிறார் அழகர். அதாவது, இன்று ஊடல் விளையாட்டுவிளையாடுவது என்று முடிவு செய்துவிட்ட தலைவி அதற்கான காரணங்களை நுணுகி நுணுகி கண்டறிந்து ஊடியது என்று இதை விளக்கலாம். பிரமாதமான தலைப்பு ! இன்றும் காதல் விளையாட்டில்நிலைத்திருக்கும் தருணங்கள் இவை என்று நினைக்கையில் ஆச்சர்யம் மேலிடுகிறது. எம் பாட்டனா ? கொக்கா ?

              
          புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு

  நான் உன மார்பை தழுவேன். ஏனெனில் அதை எல்லாப் பெண்களும் கண்களால் உண்கிறார்கள். இது உலா போய்வந்த தலைவனிடம் தலைவி ஊடியது என்கிறார் அழகர்.

ஊடி இருந்தோமாத் தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பாக்கு அறிந்து

நாங்கள் ஊடலில் இருந்தோமா, அப்போது வேண்டுமென்றே தலைவன் தும்முவது போல் நடித்தான்.
நான் நீடு வாழ்க என்று வாழ்த்துவேன் எனக் கருதி .

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

வேற்று நிலத்தின் வளைந்த பூக்களையுடைய மாலையை நான் இயல்பாகச் சூடினாலும், அந்நிலத்தாளுக்கு குறிப்பு காட்டவே சூடினீர் என்று சினக்கிறாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

யாரினும் உன்னை காதலிக்கிறேன் என்றேன். பதறினாள்,யாரினும் யாரினும் என்று.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனா
கண்நிறை நீர் கொண்டனள்.

இம்மையில் பிரியோம் என்று ஆற்றினேன். எனில்,  மறுமையில்..... ? என்று ஊடி அழுதாள்.


உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

உன்னை நினைத்துக்கொண்டேன் “ என்று சொன்னேன். அதற்கு மகிழ்ந்து என்னை புல்ல வந்தவள், தீடீரென்று  “ அப்படியெனில் இடையே மறந்திருந்தீரா..? “ என்று புலத்தாள்.
                         ( புல்லுதல் – தழுவுதல் )


வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று

நான் தும்மினேன். தற்கு அவள் இயற்கையாக வாழ்த்தினாள் பிறகு அதை விடுத்து “ யார் உன்னை நினைத்தார் “ எனக் கேட்டு அழுதாள்

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
                                  
தும்மினால்,  யார் நினைத்தார் ? எனக் கேட்டு சண்டையிடுவாள் என்றஞ்சி தும்மலை அடக்கினேன். பிற பெண்டிர் உன்னை நினைப்பதை  மறைக்கத்தான் தும்மலை அடக்கினிரா என்கிறாள்.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கு நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று

   வேறு வழியின்றி “ தானே தவறுடையோன்... “ என்று பணிந்திரங்கி ஆற்றினாலும், “பிற பெண்டிர் ஊடும் போதும் இவ்வாறு தான் ஆற்றுவாயோ?” என்கிறாள்.


நினைத்து இருந்து நோக்கினும் காயும் அனைத்து நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று.


 எது பேசினாலும் ஊடுகிறாளே என்று எதுவும் பேசாமல் வெறுமனே அவளை பார்த்துக் கொண்டிருந்தேன்...  யாரை எண்ணிக்கொண்டு என்னை நோக்குகிறீர் ? என்கிறாள்


                     ( எழுதிக் கொண்டிருக்கும் நூலிலிருந்து )

நிலம் நோக்கும் இசை - சாம்ராஜ்

$
0
0

                 
   



     இசையின்கட்டுரைகள்குறித்துப்பேசவே நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும், இசையின்ஒருகவிதையோடுஇதைத்தொடங்கலாம்என்றிருக்கிறேன். காரணத்தோடுதான்...
குடும்பநாய்; சிலசித்திரங்கள்
1.
ஒருகுடும்பநாய்
குடும்பத்தைதின்று
குடும்பத்தைபேண்டு
அதையேதின்று
அதையேபேழ்வது
2.
 உண்மையில்குடும்பநாய்களுக்கு
 சங்கிலியோகயிறோதேவையில்லை
3.
 குடும்பநாய்களைநாம்பரிசோதிக்க
 வேண்டியதில்லை.
 அவைநிச்சயம்நல்லசாதிநாய்கள்.

4.
 குடும்பநாய்கள்
 சமயங்களில்
 திருட்டுபூனைகள்

5.
குடும்பநாய்களுக்கு
விசாலமானவீடுகள்உண்டு
என்றாலும்
அவைஅழுக்கானவிடுதிகளிலே
சுத்தமானகாற்றுகிடைப்பதாகச்சொல்கின்றன.
எனவேசிலநேரங்களில்
சொந்தஊரிலேயேஅறைஎடுத்துதங்குகின்றன.
6.
 குடும்பநாய்களிலும்பெட்டைகள்இன்னும்பாவம்
 அவைபாத்ரூம்களில்
 மட்டும்நடமானஅனுமதிக்கப்பட்டவை
7.
 குடும்பநாயின்கர்ப்பகுட்டிகளின்
 வயிற்றில்வளர்ந்துவருகிறது.
 சலாமிடுதல்என்கிறபட்டறிவு
8.
குடும்பநாய்கள்ரொம்பவும்மனசாட்சிக்குபயந்தவை
எனவே
எல்லாஅநீதிகளுக்குஎதிராகவும்
அவைஇரண்டுமுறைகுறைத்துவிடுகின்றன

9
ஒருகுடும்பநாய்
தன்வாழ்வில்ஒருமுறையேனும்
தண்டவாளத்தைஉற்றுப்பார்க்கிறது

10

 சிலகுடும்பநாய்கள்
 உத்திரத்தில்தொங்கி
 கவரிமான்கள்ஆகின்றன.

 இப்படிஇந்தக்கவிதையைமுழுமையாகவாசிப்பதற்குஒருகாரணம்இருக்கிறது. இசையின்நேர்காணலில்ஒருபத்திஉண்டு….
 “ அப்புறம்என்வாழ்வுஒன்றும்லட்சியவாழ்வுஒன்றும்கிடையாது. சொந்தகாரியோடுகூடிசொந்தசாதிப்பிள்ளைகளைஈனப்போகிறநான். சாதிஒழிப்பைப்பற்றிபேசும்போதுஎன்தொண்டையில்என்னவோஉறுத்துகிறது. இலக்கியம், கவிதை, புரட்சி, என்கிறஒருஇழவும்தெரியாதஎன்தங்கையொருத்திசாணிப்பொடியைகரைத்துகுடித்து  தன்காதலைநிறைவேற்றிக்கொள்கிறாள். அந்தநெஞ்சுரம்கூடஇல்லாதவனாகத்தான்நான்இருந்திருக்கிறேன். குடும்பம்என்றவலியதாம்புக்கயிறால்இழுத்துக்கட்டப்பட்டிருக்கும்எழுபத்தியொருகிலோநாய்நான், எனவேதான்முழங்குவதற்குபதிலாகஅழுகிறேன். என்சிலபடைப்புகளில்குடும்பம்என்கிறதளையிலிருந்துவெளியேறதவிக்கிறஒருமனிதனின்விசும்பலைநீங்கள்காதிருந்தால்கேட்கலாம்.அப்புறம்என்னைபோன்றவர்களுக்காகத்தான்சேகுவாராடீ- சர்ட்டுகளைமலிவுவிலையில்ரோட்டில்விற்கிறார்கள்.... “

திருடன்மணியன்பிள்ளைசுயசரிதைகுறித்தஇவரதுமதிப்புரைஇப்படிதுவங்குகிறது....

  இந்தப்புத்தகத்தைபடிக்கவும்இதுகுறித்துஎழுதவும்அடிப்படைதகுதிஒன்றுஅவசியம்என்றுநினைக்கிறேன். அதுதானும்ஒருவகையில்திருடன்என்கிறபுரிந்துணர்வே. சமூகக்கட்டுபாட்டைகுலைக்கும்திருட்டுஎன்கிறகுற்றம்தண்டனைக்குரியதாகிறது. இதுபோலவேசமூகம்  உருவாக்கிவைத்திருக்கிறஒழுங்குகளைகுலைக்கிறபலவும்தண்டனைக்குரியகுற்றங்களேஎன்பதைநாம்நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும். திருடர்கள்க்ளவுஸ்அணிந்துகொள்ளும்போதும்எங்கேனும்ஓரிடத்தில்தன்கைரேகையைதவறவிட்டுவிடுகிறார்கள். ஆனால்வெடிகுண்டைச்சத்தமில்லாமல்வெடிக்கவைப்பதில்சமத்தர்களானநாம்வெகுநிதானமாக,வெகுநுட்பமாகதேர்ந்தகைகளால்குற்றங்களைச்செய்கிறோம். தனிமையில்நம்சிந்தைகள்அடிக்கிறகூத்துகளைநாமேஅறிவோம்என்கிறபடியால்நாம்மணியம்பிள்ளைக்குசற்றும்சளைத்தவர்கள்இல்லை.... “


 “ நாம்கொஞ்சம்துணிந்திருந்தால்செய்திருக்ககூடியஅற்பத்தனங்கள்தான்இவை. மணியன்பிள்ளைநினைத்ததைமுடித்தவர். நாம்நினைத்துநினைத்துஏங்குபவர்கள்... “

     நான்வாசித்தஅந்தக்கவிதையையும்அடுத்தவாசித்தஉரைநடைப் பத்திகளையும்இணைத்துவாசித்தால்இசைஎன்றஎழுத்துக்காரனின்சித்திரம்துலங்கம்பெறும். இத்தோடுஇசையின்இந்தவரிகளையும்சேர்த்துக் கொண்டோமேயானால்.

 ‘நாங்கள்முட்டாளகத்தான்இருந்தோம்  ஆனால்சந்தோஷமாகஇருந்தோம்ஒருவேளைஅறிவைதொலைத்துவிட்டுபோனால்தான்சந்தோஷம்கட்டிக்கொள்ளுமோஎன்னமோ? மண்டைக்குள்பூரான்ஊறாதஅக்காலத்தையேநான்மகிழ்ந்திருந்தகாலமென்றுஇன்றும்சொல்வேன்.’

     இந்தவரிகள்இசையின்சித்திரத்தைபூர்த்திசெய்கின்றன.

 கவிதைஎழுதுகின்றஅதேமனோபாவத்தோடு, அதேதயக்கத்தோடு, அதேகுழப்பத்தோடு, அதேபகடியோடு, அதேஅச்சத்தோடுஅதேதொழுதலோடுதான்இந்தஇலக்கியவிமர்சனகட்டுரைகளைஇசைஎழுதுகிறார். இசைக்குகவிதைக்கென்றுஒருபேனாஇலக்கியவிமர்சனத்துக்கென்றுஒருபேனாஎனதனித்தனியாகஇல்லை. எல்லாமேஅந்தக்காலைநடையில், ரயில்நிலையத்தில், ரயிலில்சோமனூரிலிருந்துபூமலூர்ஆரம்பசுகாதரநிலையத்துக்குஇடையேயானபாதையில் உருக்கொண்டவைதான்.


      







    தமிழ்இலக்கியத்தில்இலக்கியவிமர்சனமரபுநீண்டகாலத்தையும்வரிசையும்கொண்டது. ஒருபுறம்படைப்பாளிகளாகவும், இலக்கியவிமர்சகராகவும்ஒருங்கேஇருப்பவர்கள்மறுபுறம்திறனாய்வுமாத்திரம்செய்கிறவர்கள்என்கிறஇருவரிசைதிருப்பதிதேவஸ்தானத்தின்முன்நீண்டுகிடப்பதுபோல்எப்போதும்உண்டு. கடவுளைகணநேரம்காணமாத்திரமேஅனுமதி. ‘ரெண்டிரெண்டிஎன்கிறகாலத்தின்குரல்எப்போழுதும்விரட்டிக்கொண்டேஇருக்கும். திறனாய்வுமாத்திரம்செய்கின்றவர்கள். அந்தக்கணநேரத்தில்காலைப்பார்த்தால்காலை ,கையைப்பார்த்தால்கையைஎனவெளியேவந்துஅங்கஅங்கமாய்வெங்கடாசலபதியைவெட்டுவார்கள். மாறாகபடைப்பாளிகளாகவும், இலக்கியவிமர்சகராகவும்ஒருங்கேஇருப்பவர்களைப்பார்த்துக்அந்தக்கணநேரத்திற்குள்ளும்வெங்கடாசலபதிஅவர்களைப்பார்த்துபுன்னகைப்பார். திறனாய்வாளர்களைப்பார்த்துசிரிப்பதற்குஅவர்களிடம்அவருக்குஎன்னஇருக்கிறது ?

   “அண்டாக்காகசம்அபூக்காகசம் “என்றமந்திரத்தைமனப்பாடம்செய்துகொண்டுபோனாலும்திறனாய்வாளர்களுக்குஒருபொழுதும்திறந்ததேஇல்லைஇலக்கியகுகை. வரலாற்றில்அவர்கள்செய்தபாவம்அப்படி.

   ஏசுநாதர்ரத்தம்சிந்தியவாறுசிலுவையைசுமந்தபடிபோனார் என்றுஎழுதியிருப்பதைபின்தொடந்துபோகும்அவர்கள்அந்தரத்தம்சிந்தியமண்ணை எடுத்துநுகர்ந்துபார்த்துஇந்தவகைபிளட்குரூப்இந்தநிலத்தில்இல்லையேஇதுஎப்படிஉண்மையானஇலக்கியம்ஆகும்என்றுகேட்டவர்களைதிரும்பிபார்த்தஏசுநாதர்அப்பொழுதேஅவர்களையூதாஸ்பட்டியலில்சேர்த்துவிட்டார். உலகம்அழியும்போதுதான்இவர்களுக்குபாவமன்னிப்பு.

   நம்தமிழ்இலக்கியத்தில்இலக்கியவாதிகளேபொறுப்புடன்இலக்கியவிமர்சனத்தைமுன்னெடுத்துசென்றனர்...செல்கின்றனர். ஒருகணக்கில்அதுபாரதியில்தொடங்குகிறது. புதுமைபித்தன்எனநீண்டுசுந்தரராமசாமிஎனவளர்ந்துஜெயமோகன், எனஅதுபோய்க்கொண்டிருக்கிறது. வெங்கட்சுவாமிநாதன்போன்றவர்கள்விதிவிலக்கு.


   மார்க்சியதிறனாய்வாளார்கள்என்றொருமரபுண்டு. கைலாசபதி, சிவத்தம்பி, ஞானி, கோ. கேசவன், எஸ்.வி. ராஜதுரை  . மார்க்ஸ், எனஅந்தப்பட்டியல்நீளும். இதில்கோவைஞானிமாத்திரமேவிதிவிலக்கு.அவரேஜெயமோகனின்ரப்பரைஅடையாளம்கண்டுகொண்டார். தொடர்ந்துஅவரைப்பற்றிஎழுதினார். கோ.கேசவனின்தமிழ்ச்சிறுகதையின்உருவம்என்றொருநூல்உண்டு. பத்தோபனிரெண்டோசிறுகதையாசிரியர்களின்சிறுகதைபற்றிபேசும்நூல்அது. மிகசட்டகமானதட்டகமானமுன்முடிவுகள்கொண்டநூல்அது. கேசவன்மிகச்சிறந்தமார்க்சியஆய்வாளர். சாதிகள்குறித்துஅவரதுஆய்வுகள்மிகமுக்கியமானவை. ஆனால்இலக்கியத்தில்கு.சின்னப்பபாரதிஎழுதுவதைஇலக்கியம்என்றுநம்பக்கூடியவர். பழநிபாரதியைப்பற்றி  ஒருநேர்ப்பேச்சில்என்னிடம்இப்படிகுறிப்பிட்டார். பழநிபாரதியின்சிலகவிதைதொகுப்புகள்வெளிவந்திருந்தகாலமதுபழநிபாரதிநல்லாபாட்டுகட்டுவான்கவிதைஎழுதுவதென்பதுபாட்டுக்கட்டுவாதாகத்தான்அவர்மூளையில்பதிந்திருந்தது.

   எப்பொழுதும்ஒருஇலக்கியவாசகனுக்குஇலக்கியவாதியேசுவற்றோடுமறைந்திருக்கும்கதவுகளைதிறந்துவிடுகிறான். இலக்கியதிறனாய்வாளன்கோட்பாடுகள்பேசுகிறான். தன்கோட்பாட்டுபெட்டியில்படைப்பாளியைஅடைக்கமுற்படுகிறான். வெளியேதொங்கும்கால்கள்அவனுக்குவேண்டாதவை.
இசையின்முதல்கட்டுரைதொகுதியான“அதனினும்இனிதுஅறிவினர்சேர்தல் “கட்டுரைதொகுதிகுறித்து..

 “ஒரேவிபூதிபொட்டலமாஇருக்கேஎன.. “தான்இசைக்குகுறுஞ்செய்திஅனுப்பியதாய்கவிஞர்சங்கரராமசுப்பிரமணியம்நேர்பேச்சில்சொன்னார். முதல்தொகுதியில்நண்பர்களின்தொகுதிகளுக்கு  கூடுதலாக எழுதியிருப்பதைக்கொண்டுஷங்கர்அப்படிசொல்லியிருக்கலாம். ஆனால்அந்ததொகுதியில்தூரன்குணாவின்கடல்நினைவுஎன்றகவிதைதொகுதிக்கு  இசைஎழுதியிருக்கும்கட்டுரையின்சிறியபகுதியைமாத்திரம்வாசிக்கிறேன்.

அந்திமகாலஒட்டகங்கள்
மூப்பின்துர்வாசனையோடு
காட்சிபொருளாய்நடக்கும்
நகரத்தின்சிமிண்ட்தெருக்களில்
மங்கைகள்இறகுபந்துவிளையாடுகிறார்கள்
இந்தஐந்துவரியைமுன்வைத்துகுணாவின்கவிதைகளில்துளியூண்டும்அழுவதற்குஇடமில்லைஎன்கிறஎன்முந்தையவரியைஒருவாசகன்நிராகரிப்பானனால்நான்மிகவும்மகிழ்ச்சிஅடைவேன். இந்தஆயூளின்அனேகஇரவுகளைநனைக்கஇந்தஐந்துவரிகள்போதுமானவைதான். ஆனால்இந்தவரிகளுக்குப்பின்குணாபிதற்றுவதுஎதுவும்இந்தஅனுபவத்தைதாண்டியதாகவோதக்கவைத்துக்கொள்வதாகவோஇல்லை. தன்புத்திசாலித்தனத்தின்பாறாங்கல்லைப்போட்டுஅவ்வனுபவத்தைஉருத்தெரியாமல்நசுக்கிவிடப்பார்க்கிறான்.’

   கல்யாண்ஜிகவிதைகள்குறித்தகட்டுரையில்என்வாழ்வில்இதுஒருவரலாற்றுத்தருணம். எனக்குஒருவாழ்வுண்டுஎன்பதையும்அதற்கு வரலாறுண்டுஎன்பதையும்தயவுசெய்துநீங்கள்நம்பவேண்டும். இதுபோன்றஒருதருணத்தில்நான்நெஞ்சராப்பொய்சொல்வதையோ, கபடமாகஎதையோமறைத்துவைப்பதையோவிரும்பவில்லை. எனவேஇத்தொகுப்பில்என்னைஉறுத்துகிறவிஷயம்ஒன்றையும்நான்பதிவுசெய்திடவேவிரும்புகிறேன். அப்படிசெய்யாதுவிட்டுவிடுவதுகவிதைஎன்கிறபோர்க்களத்தில்இளைஞர்களோடுஇளைஞனாய்இன்றளவும்வாள்வீசத்துடிக்கும்கல்யாண்ஜிக்குசெய்யும்ஒருவிததுரோகமும்ஆகும். கல்யாண்ஜிசிலகவிதைகளில்அந்த  கவிதைசொல்லவரும்சேதியைஉருத்திரட்டிஒருகட்டுரையின்முடிவுரையைப்போலகடைசிஇரண்டுவரிகளில்சொல்கிறார். அவர்கடைசிஇரண்டுவரிகளில்சொல்லவருவதுஏற்கனவேஅக்கவிதைசொல்லிமுடித்துவிட்டஒன்றாகஇருக்கிறது………………… இதுஒருதொழில்நுட்பக்கோளாறுதான். தொழிற்நுட்பமும்சேர்ந்ததுதான்கவிதைஎன்பதுஅவர்அறியாததல்ல
இசைகலையில்யாருக்கும்சலுகைகள்தருவதுகிடையாது.

   அவரதுஇரண்டாவதுதொகுதியானலைட்டாபொறாமைப்படும்கலைஞன்நண்பர்களோடானஉறவைஏறக்குறையமுறித்துக்கொள்கிறது. பெருமாள்முருகன், திருடன்மணியன்பிள்ளை, சுப்ரமணியபாரதி, தோழர். தியாகு, ஞானக்கூத்தன், மிஷ்கின், மோகனரங்கன், சே. பிருந்தா, குத்துப்பாட்டு, எனகலவையாகரகளையாகவிரிகிறது. பாரதிகுறித்தகட்டுரையும்கவி- கவிதை-கலகம்கலப்படம்சிலஅடிப்படைகுழப்பங்கள்கட்டுரையும்மிகஅசலானவைநம்மைபரவசத்தில்ஆழ்த்துபவை.

   இசையின்கட்டுரைகள்ஒருங்கேசந்தோஷத்தையும்பதட்டத்தையும்புதியகண்டுபிடித்தங்களையும்நமக்குவழங்குகிறது. நாள்முழுக்கஜெபமாலையைஉருட்டிகொண்டிருக்கும்மூதாட்டிகளைப்போலஇத்தொகுப்பில்நீண்டகாலத்திற்குஅப்படிமனதில்உருட்டுவதற்கானவரிகள்உண்டு.
இசையின்கட்டுரைகளின்தலைப்புகளேவசீகரமானவை. பிசாசுபற்றியானகட்டுரையைஅவர்இப்படிமுடிக்கிறார்.

 “ பிசாசுபியர்பாட்டிலைஉடைக்கிறது, சிகரெட்பாக்கெட்டையும்பறித்துபோகிறது, ஆனால்அக்காட்சிகள்நம்நெஞ்சோடுபேசுவதுபுகைபிடிக்காதீர் !மதுஅருந்தாதீர்! போன்றஒழுக்கவசனங்களைஅல்லஎன்பதுஎன்துணிபு. வாகனம்ஓட்டும்போதுசெல்போன்பேசாதீர்என்கிறஅறிவுரையும்படத்தில் உண்டுஅதுவும்படத்தின்மையத்தில்...இருந்தும்அப்படிஒன்றுஇருப்பதையேநம்கவனத்தில்இருந்துமறைத்திருப்பதைகலைவித்தைஎன்றுசொல்லலாம்.

  “பொதுவாகபியர்பாட்டிலைஉடைத்துபோடும்பிசாசை நமக்குப்பிடிக்காதல்லவா? பிறகேன்நாமிதைஇப்படிசீராட்டுகிறோம்? என்னதான்நடக்கிறதுகலையில் ? “

                  

           


நிறையவாசித்துக்காட்டலாம்தான்ஆனால்அதுமனிதஉரிமைமீறாலாகும்நானெல்லாம்கால்நூற்றாண்டுஅனுபவித்ததுஅதையேஉங்களுக்கும்நானும்திருப்பிச்செய்தால்மாமியார்மருமகள்பழிவாங்குதல்போலாகும்ஒரேஒருபத்தியோடுவிடைபெற்றுக்கொள்கிறேன்.

  "கலைதன்சோதிப்ரகாசத்தைநமக்குகாட்டிமறைக்கிறது. மானுடவாழ்வின்பொற்கணம்ஒன்றைஏந்திநம்உயிர்தளும்பிவழிகிறது. கடவுளைக்காணகடுந்தவம்புரியும்ஒருவன்கண்டமாத்திரத்தில்கண்களைமூடிக்கொள்கிறான். அப்படிக்கண்களைமூடிக்கொள்ளச்செய்வதன்பெயரேகடவுள். நாம்அதைப்பார்க்கமுடியாது. அதனூடேபேசமுடியாது. மாறாகஅதன்சோதியும்ப்ரகாசமும்எங்கிருந்துவருகிறதுஎன்றுபார்த்துவிடலாம் என்று கிளம்பியபலரும்ஒருஅதிகாலையில்இரத்தம்கக்கிக்கிடந்திருக்கிறார்கள். இரத்தம்கக்கிச்சாகத்துணிந்தவர்கள்என்னோடுவரலாம்... "

       போகலாம்இசை...சாகலாம்இசை.

                 ( இசையின் கட்டுரைத் தொகுதிகளைக் குறித்து ஆற்றிய உரை )                     
                             நன்றி : வாசகசாலை அமர்வு 

நிலம் நோக்கும் இசை - சாம்ராஜ்

$
0
0

                 
   



     இசையின்கட்டுரைகள்குறித்துப்பேசவே நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். என்றாலும், இசையின்ஒருகவிதையோடுஇதைத்தொடங்கலாம்என்றிருக்கிறேன். காரணத்தோடுதான்...
குடும்பநாய்; சிலசித்திரங்கள்
1.
ஒருகுடும்பநாய்
குடும்பத்தைதின்று
குடும்பத்தைபேண்டு
அதையேதின்று
அதையேபேழ்வது
2.
 உண்மையில்குடும்பநாய்களுக்கு
 சங்கிலியோகயிறோதேவையில்லை
3.
 குடும்பநாய்களைநாம்பரிசோதிக்க
 வேண்டியதில்லை.
 அவைநிச்சயம்நல்லசாதிநாய்கள்.

4.
 குடும்பநாய்கள்
 சமயங்களில்
 திருட்டுபூனைகள்

5.
குடும்பநாய்களுக்கு
விசாலமானவீடுகள்உண்டு
என்றாலும்
அவைஅழுக்கானவிடுதிகளிலே
சுத்தமானகாற்றுகிடைப்பதாகச்சொல்கின்றன.
எனவேசிலநேரங்களில்
சொந்தஊரிலேயேஅறைஎடுத்துதங்குகின்றன.
6.
 குடும்பநாய்களிலும்பெட்டைகள்இன்னும்பாவம்
 அவைபாத்ரூம்களில்
 மட்டும்நடமானஅனுமதிக்கப்பட்டவை
7.
 குடும்பநாயின்கர்ப்பகுட்டிகளின்
 வயிற்றில்வளர்ந்துவருகிறது.
 சலாமிடுதல்என்கிறபட்டறிவு
8.
குடும்பநாய்கள்ரொம்பவும்மனசாட்சிக்குபயந்தவை
எனவே
எல்லாஅநீதிகளுக்குஎதிராகவும்
அவைஇரண்டுமுறைகுறைத்துவிடுகின்றன

9
ஒருகுடும்பநாய்
தன்வாழ்வில்ஒருமுறையேனும்
தண்டவாளத்தைஉற்றுப்பார்க்கிறது

10

 சிலகுடும்பநாய்கள்
 உத்திரத்தில்தொங்கி
 கவரிமான்கள்ஆகின்றன.

 இப்படிஇந்தக்கவிதையைமுழுமையாகவாசிப்பதற்குஒருகாரணம்இருக்கிறது. இசையின்நேர்காணலில்ஒருபத்திஉண்டு….
 “ அப்புறம்என்வாழ்வுஒன்றும்லட்சியவாழ்வுஒன்றும்கிடையாது. சொந்தகாரியோடுகூடிசொந்தசாதிப்பிள்ளைகளைஈனப்போகிறநான். சாதிஒழிப்பைப்பற்றிபேசும்போதுஎன்தொண்டையில்என்னவோஉறுத்துகிறது. இலக்கியம், கவிதை, புரட்சி, என்கிறஒருஇழவும்தெரியாதஎன்தங்கையொருத்திசாணிப்பொடியைகரைத்துகுடித்து  தன்காதலைநிறைவேற்றிக்கொள்கிறாள். அந்தநெஞ்சுரம்கூடஇல்லாதவனாகத்தான்நான்இருந்திருக்கிறேன். குடும்பம்என்றவலியதாம்புக்கயிறால்இழுத்துக்கட்டப்பட்டிருக்கும்எழுபத்தியொருகிலோநாய்நான், எனவேதான்முழங்குவதற்குபதிலாகஅழுகிறேன். என்சிலபடைப்புகளில்குடும்பம்என்கிறதளையிலிருந்துவெளியேறதவிக்கிறஒருமனிதனின்விசும்பலைநீங்கள்காதிருந்தால்கேட்கலாம்.அப்புறம்என்னைபோன்றவர்களுக்காகத்தான்சேகுவாராடீ- சர்ட்டுகளைமலிவுவிலையில்ரோட்டில்விற்கிறார்கள்.... “

திருடன்மணியன்பிள்ளைசுயசரிதைகுறித்தஇவரதுமதிப்புரைஇப்படிதுவங்குகிறது....

  இந்தப்புத்தகத்தைபடிக்கவும்இதுகுறித்துஎழுதவும்அடிப்படைதகுதிஒன்றுஅவசியம்என்றுநினைக்கிறேன். அதுதானும்ஒருவகையில்திருடன்என்கிறபுரிந்துணர்வே. சமூகக்கட்டுபாட்டைகுலைக்கும்திருட்டுஎன்கிறகுற்றம்தண்டனைக்குரியதாகிறது. இதுபோலவேசமூகம்  உருவாக்கிவைத்திருக்கிறஒழுங்குகளைகுலைக்கிறபலவும்தண்டனைக்குரியகுற்றங்களேஎன்பதைநாம்நினைவில்வைத்துக்கொள்ளவேண்டும். திருடர்கள்க்ளவுஸ்அணிந்துகொள்ளும்போதும்எங்கேனும்ஓரிடத்தில்தன்கைரேகையைதவறவிட்டுவிடுகிறார்கள். ஆனால்வெடிகுண்டைச்சத்தமில்லாமல்வெடிக்கவைப்பதில்சமத்தர்களானநாம்வெகுநிதானமாக,வெகுநுட்பமாகதேர்ந்தகைகளால்குற்றங்களைச்செய்கிறோம். தனிமையில்நம்சிந்தைகள்அடிக்கிறகூத்துகளைநாமேஅறிவோம்என்கிறபடியால்நாம்மணியம்பிள்ளைக்குசற்றும்சளைத்தவர்கள்இல்லை.... “


 “ நாம்கொஞ்சம்துணிந்திருந்தால்செய்திருக்ககூடியஅற்பத்தனங்கள்தான்இவை. மணியன்பிள்ளைநினைத்ததைமுடித்தவர். நாம்நினைத்துநினைத்துஏங்குபவர்கள்... “

     நான்வாசித்தஅந்தக்கவிதையையும்அடுத்தவாசித்தஉரைநடைப் பத்திகளையும்இணைத்துவாசித்தால்இசைஎன்றஎழுத்துக்காரனின்சித்திரம்துலங்கம்பெறும். இத்தோடுஇசையின்இந்தவரிகளையும்சேர்த்துக் கொண்டோமேயானால்.

 ‘நாங்கள்முட்டாளகத்தான்இருந்தோம்  ஆனால்சந்தோஷமாகஇருந்தோம்ஒருவேளைஅறிவைதொலைத்துவிட்டுபோனால்தான்சந்தோஷம்கட்டிக்கொள்ளுமோஎன்னமோ? மண்டைக்குள்பூரான்ஊறாதஅக்காலத்தையேநான்மகிழ்ந்திருந்தகாலமென்றுஇன்றும்சொல்வேன்.’

     இந்தவரிகள்இசையின்சித்திரத்தைபூர்த்திசெய்கின்றன.

 கவிதைஎழுதுகின்றஅதேமனோபாவத்தோடு, அதேதயக்கத்தோடு, அதேகுழப்பத்தோடு, அதேபகடியோடு, அதேஅச்சத்தோடுஅதேதொழுதலோடுதான்இந்தஇலக்கியவிமர்சனகட்டுரைகளைஇசைஎழுதுகிறார். இசைக்குகவிதைக்கென்றுஒருபேனாஇலக்கியவிமர்சனத்துக்கென்றுஒருபேனாஎனதனித்தனியாகஇல்லை. எல்லாமேஅந்தக்காலைநடையில், ரயில்நிலையத்தில், ரயிலில்சோமனூரிலிருந்துபூமலூர்ஆரம்பசுகாதரநிலையத்துக்குஇடையேயானபாதையில் உருக்கொண்டவைதான்.


      







    தமிழ்இலக்கியத்தில்இலக்கியவிமர்சனமரபுநீண்டகாலத்தையும்வரிசையும்கொண்டது. ஒருபுறம்படைப்பாளிகளாகவும், இலக்கியவிமர்சகராகவும்ஒருங்கேஇருப்பவர்கள்மறுபுறம்திறனாய்வுமாத்திரம்செய்கிறவர்கள்என்கிறஇருவரிசைதிருப்பதிதேவஸ்தானத்தின்முன்நீண்டுகிடப்பதுபோல்எப்போதும்உண்டு. கடவுளைகணநேரம்காணமாத்திரமேஅனுமதி. ‘ரெண்டிரெண்டிஎன்கிறகாலத்தின்குரல்எப்போழுதும்விரட்டிக்கொண்டேஇருக்கும். திறனாய்வுமாத்திரம்செய்கின்றவர்கள். அந்தக்கணநேரத்தில்காலைப்பார்த்தால்காலை ,கையைப்பார்த்தால்கையைஎனவெளியேவந்துஅங்கஅங்கமாய்வெங்கடாசலபதியைவெட்டுவார்கள். மாறாகபடைப்பாளிகளாகவும், இலக்கியவிமர்சகராகவும்ஒருங்கேஇருப்பவர்களைப்பார்த்துக்அந்தக்கணநேரத்திற்குள்ளும்வெங்கடாசலபதிஅவர்களைப்பார்த்துபுன்னகைப்பார். திறனாய்வாளர்களைப்பார்த்துசிரிப்பதற்குஅவர்களிடம்அவருக்குஎன்னஇருக்கிறது ?

   “அண்டாக்காகசம்அபூக்காகசம் “என்றமந்திரத்தைமனப்பாடம்செய்துகொண்டுபோனாலும்திறனாய்வாளர்களுக்குஒருபொழுதும்திறந்ததேஇல்லைஇலக்கியகுகை. வரலாற்றில்அவர்கள்செய்தபாவம்அப்படி.

   ஏசுநாதர்ரத்தம்சிந்தியவாறுசிலுவையைசுமந்தபடிபோனார் என்றுஎழுதியிருப்பதைபின்தொடந்துபோகும்அவர்கள்அந்தரத்தம்சிந்தியமண்ணை எடுத்துநுகர்ந்துபார்த்துஇந்தவகைபிளட்குரூப்இந்தநிலத்தில்இல்லையேஇதுஎப்படிஉண்மையானஇலக்கியம்ஆகும்என்றுகேட்டவர்களைதிரும்பிபார்த்தஏசுநாதர்அப்பொழுதேஅவர்களையூதாஸ்பட்டியலில்சேர்த்துவிட்டார். உலகம்அழியும்போதுதான்இவர்களுக்குபாவமன்னிப்பு.

   நம்தமிழ்இலக்கியத்தில்இலக்கியவாதிகளேபொறுப்புடன்இலக்கியவிமர்சனத்தைமுன்னெடுத்துசென்றனர்...செல்கின்றனர். ஒருகணக்கில்அதுபாரதியில்தொடங்குகிறது. புதுமைபித்தன்எனநீண்டுசுந்தரராமசாமிஎனவளர்ந்துஜெயமோகன், எனஅதுபோய்க்கொண்டிருக்கிறது. வெங்கட்சுவாமிநாதன்போன்றவர்கள்விதிவிலக்கு.


   மார்க்சியதிறனாய்வாளார்கள்என்றொருமரபுண்டு. கைலாசபதி, சிவத்தம்பி, ஞானி, கோ. கேசவன், எஸ்.வி. ராஜதுரை  . மார்க்ஸ், எனஅந்தப்பட்டியல்நீளும். இதில்கோவைஞானிமாத்திரமேவிதிவிலக்கு.அவரேஜெயமோகனின்ரப்பரைஅடையாளம்கண்டுகொண்டார். தொடர்ந்துஅவரைப்பற்றிஎழுதினார். கோ.கேசவனின்தமிழ்ச்சிறுகதையின்உருவம்என்றொருநூல்உண்டு. பத்தோபனிரெண்டோசிறுகதையாசிரியர்களின்சிறுகதைபற்றிபேசும்நூல்அது. மிகசட்டகமானதட்டகமானமுன்முடிவுகள்கொண்டநூல்அது. கேசவன்மிகச்சிறந்தமார்க்சியஆய்வாளர். சாதிகள்குறித்துஅவரதுஆய்வுகள்மிகமுக்கியமானவை. ஆனால்இலக்கியத்தில்கு.சின்னப்பபாரதிஎழுதுவதைஇலக்கியம்என்றுநம்பக்கூடியவர். பழநிபாரதியைப்பற்றி  ஒருநேர்ப்பேச்சில்என்னிடம்இப்படிகுறிப்பிட்டார். பழநிபாரதியின்சிலகவிதைதொகுப்புகள்வெளிவந்திருந்தகாலமதுபழநிபாரதிநல்லாபாட்டுகட்டுவான்கவிதைஎழுதுவதென்பதுபாட்டுக்கட்டுவாதாகத்தான்அவர்மூளையில்பதிந்திருந்தது.

   எப்பொழுதும்ஒருஇலக்கியவாசகனுக்குஇலக்கியவாதியேசுவற்றோடுமறைந்திருக்கும்கதவுகளைதிறந்துவிடுகிறான். இலக்கியதிறனாய்வாளன்கோட்பாடுகள்பேசுகிறான். தன்கோட்பாட்டுபெட்டியில்படைப்பாளியைஅடைக்கமுற்படுகிறான். வெளியேதொங்கும்கால்கள்அவனுக்குவேண்டாதவை.
இசையின்முதல்கட்டுரைதொகுதியான“அதனினும்இனிதுஅறிவினர்சேர்தல் “கட்டுரைதொகுதிகுறித்து..

 “ஒரேவிபூதிபொட்டலமாஇருக்கேஎன.. “தான்இசைக்குகுறுஞ்செய்திஅனுப்பியதாய்கவிஞர்சங்கரராமசுப்பிரமணியம்நேர்பேச்சில்சொன்னார். முதல்தொகுதியில்நண்பர்களின்தொகுதிகளுக்கு  கூடுதலாக எழுதியிருப்பதைக்கொண்டுஷங்கர்அப்படிசொல்லியிருக்கலாம். ஆனால்அந்ததொகுதியில்தூரன்குணாவின்கடல்நினைவுஎன்றகவிதைதொகுதிக்கு  இசைஎழுதியிருக்கும்கட்டுரையின்சிறியபகுதியைமாத்திரம்வாசிக்கிறேன்.

அந்திமகாலஒட்டகங்கள்
மூப்பின்துர்வாசனையோடு
காட்சிபொருளாய்நடக்கும்
நகரத்தின்சிமிண்ட்தெருக்களில்
மங்கைகள்இறகுபந்துவிளையாடுகிறார்கள்
இந்தஐந்துவரியைமுன்வைத்துகுணாவின்கவிதைகளில்துளியூண்டும்அழுவதற்குஇடமில்லைஎன்கிறஎன்முந்தையவரியைஒருவாசகன்நிராகரிப்பானனால்நான்மிகவும்மகிழ்ச்சிஅடைவேன். இந்தஆயூளின்அனேகஇரவுகளைநனைக்கஇந்தஐந்துவரிகள்போதுமானவைதான். ஆனால்இந்தவரிகளுக்குப்பின்குணாபிதற்றுவதுஎதுவும்இந்தஅனுபவத்தைதாண்டியதாகவோதக்கவைத்துக்கொள்வதாகவோஇல்லை. தன்புத்திசாலித்தனத்தின்பாறாங்கல்லைப்போட்டுஅவ்வனுபவத்தைஉருத்தெரியாமல்நசுக்கிவிடப்பார்க்கிறான்.’

   கல்யாண்ஜிகவிதைகள்குறித்தகட்டுரையில்என்வாழ்வில்இதுஒருவரலாற்றுத்தருணம். எனக்கொரு வாழ்வுண்டுஎன்பதையும்அதற்கொரு வரலாறுண்டுஎன்பதையும்தயவுசெய்துநீங்கள்நம்பவேண்டும். இதுபோன்றஒருதருணத்தில்நான்நெஞ்சராப்பொய்சொல்வதையோ, கபடமாகஎதையோமறைத்துவைப்பதையோவிரும்பவில்லை. எனவேஇத்தொகுப்பில்என்னைஉறுத்துகிறவிஷயம்ஒன்றையும்நான்பதிவுசெய்திடவேவிரும்புகிறேன். அப்படிசெய்யாதுவிட்டுவிடுவதுகவிதைஎன்கிறபோர்க்களத்தில்இளைஞர்களோடுஇளைஞனாய்இன்றளவும்வாள்வீசத்துடிக்கும்கல்யாண்ஜிக்குசெய்யும்ஒருவிததுரோகமும்ஆகும். கல்யாண்ஜிசிலகவிதைகளில்அந்த  கவிதைசொல்லவரும்சேதியைஉருத்திரட்டிஒருகட்டுரையின்முடிவுரையைப்போலகடைசிஇரண்டுவரிகளில்சொல்கிறார். அவர்கடைசிஇரண்டுவரிகளில்சொல்லவருவதுஏற்கனவேஅக்கவிதைசொல்லிமுடித்துவிட்டஒன்றாகஇருக்கிறது………………… இதுஒருதொழில்நுட்பக்கோளாறுதான். தொழிற்நுட்பமும்சேர்ந்ததுதான்கவிதைஎன்பதுஅவர்அறியாததல்ல
இசைகலையில்யாருக்கும்சலுகைகள்தருவதுகிடையாது.

   அவரதுஇரண்டாவதுதொகுதியானலைட்டாபொறாமைப்படும்கலைஞன்நண்பர்களோடானஉறவைஏறக்குறையமுறித்துக்கொள்கிறது. பெருமாள்முருகன், திருடன்மணியன்பிள்ளை, சுப்ரமணியபாரதி, தோழர். தியாகு, ஞானக்கூத்தன், மிஷ்கின், மோகனரங்கன், சே. பிருந்தா, குத்துப்பாட்டு, எனகலவையாகரகளையாகவிரிகிறது. பாரதிகுறித்தகட்டுரையும்கவி- கவிதை-கலகம்கலப்படம்சிலஅடிப்படைகுழப்பங்கள்கட்டுரையும்மிகஅசலானவைநம்மைபரவசத்தில்ஆழ்த்துபவை.

   இசையின்கட்டுரைகள்ஒருங்கேசந்தோஷத்தையும்பதட்டத்தையும்புதியகண்டுபிடித்தங்களையும்நமக்குவழங்குகிறது. நாள்முழுக்கஜெபமாலையைஉருட்டிகொண்டிருக்கும்மூதாட்டிகளைப்போலஇத்தொகுப்பில்நீண்டகாலத்திற்குஅப்படிமனதில்உருட்டுவதற்கானவரிகள்உண்டு.
இசையின்கட்டுரைகளின்தலைப்புகளேவசீகரமானவை. பிசாசுபற்றியானகட்டுரையைஅவர்இப்படிமுடிக்கிறார்.

 “ பிசாசுபியர்பாட்டிலைஉடைக்கிறது, சிகரெட்பாக்கெட்டையும்பறித்துபோகிறது, ஆனால்அக்காட்சிகள்நம்நெஞ்சோடுபேசுவதுபுகைபிடிக்காதீர் !மதுஅருந்தாதீர்! போன்றஒழுக்கவசனங்களைஅல்லஎன்பதுஎன்துணிபு. வாகனம்ஓட்டும்போதுசெல்போன்பேசாதீர்என்கிறஅறிவுரையும்படத்தில் உண்டுஅதுவும்படத்தின்மையத்தில்...இருந்தும்அப்படிஒன்றுஇருப்பதையேநம்கவனத்தில்இருந்துமறைத்திருப்பதைகலைவித்தைஎன்றுசொல்லலாம்.

  “பொதுவாகபியர்பாட்டிலைஉடைத்துபோடும்பிசாசை நமக்குப்பிடிக்காதல்லவா? பிறகேன்நாமிதைஇப்படிசீராட்டுகிறோம்? என்னதான்நடக்கிறதுகலையில் ? “

                  

           


நிறையவாசித்துக்காட்டலாம்தான்ஆனால்அதுமனிதஉரிமைமீறாலாகும்நானெல்லாம்கால்நூற்றாண்டுஅனுபவித்ததுஅதையேஉங்களுக்கும்நானும்திருப்பிச்செய்தால்மாமியார்மருமகள்பழிவாங்குதல்போலாகும்ஒரேஒருபத்தியோடுவிடைபெற்றுக்கொள்கிறேன்.

  "கலைதன்சோதிப்ரகாசத்தைநமக்குகாட்டிமறைக்கிறது. மானுடவாழ்வின்பொற்கணம்ஒன்றைஏந்திநம்உயிர்தளும்பிவழிகிறது. கடவுளைக்காணகடுந்தவம்புரியும்ஒருவன்கண்டமாத்திரத்தில்கண்களைமூடிக்கொள்கிறான். அப்படிக்கண்களைமூடிக்கொள்ளச்செய்வதன்பெயரேகடவுள். நாம்அதைப்பார்க்கமுடியாது. அதனூடேபேசமுடியாது. மாறாகஅதன்சோதியும்ப்ரகாசமும்எங்கிருந்துவருகிறதுஎன்றுபார்த்துவிடலாம் என்று கிளம்பியபலரும்ஒருஅதிகாலையில்இரத்தம்கக்கிக்கிடந்திருக்கிறார்கள். இரத்தம்கக்கிச்சாகத்துணிந்தவர்கள்என்னோடுவரலாம்... "

       போகலாம்இசை...சாகலாம்இசை.

                 ( இசையின் கட்டுரைத் தொகுதிகளைக் குறித்து ஆற்றிய உரை )                     
                             நன்றி : வாசகசாலை அமர்வு 

இன்றின் கேரட்

$
0
0

                  



இன்றைய நிலவரப்படி
கால்கிலோ கேரட்  7 ரூபாய்கு விற்கப்படுகிறது
நான் எப்படியும் தினமும்
குறைந்தது இருநூறு ரூபாய் சம்பாதித்து விடுவேன்
ஆக எப்படியும் எனக்கு கேரட் உண்டு
கேரட்டுக்கு  இந்த கேரட் நிறம் எப்படி வந்தது ?
மேலும், கேரட் எங்கு எப்படி விளைகிறது ?
அதன் மூலக்கூறுகள் யாவை ?
இந்த வெங்காயமெல்லாம் எனக்குத் தேவையில்லை
நமக்கு ஆயிரத்தெட்டு  சோலிகள் கிடக்கின்றன
ஓவராகச் சிந்திக்காதே ..
இரண்டு மிளகாயைக் சேர்த்துப் போட்டு..
தேங்காயை துருவிக் கொட்டினால்...
 அட... டடா...
விலைவாசி விண்ணைமுட்டி அதற்கு அப்புறமாய் பறந்தாலும்
நம் கேரட்டை நம்மிடமிருந்து யாராலும் பறித்து விட முடியாது
போதும் உன் கேரட் புராணம்...
நாளை இந்த ப்ளாஸ்டிக் டம்ளர்களை மாற்றி விட வேண்டும்
ஒரு மாசத்துக்கும் மேல் ஆகிறது..
ஆமாம்.. மாற்ற வேண்டும்... மாற்ற வேண்டும்
நீ உன் டம்ளரை எடுத்துக் கொள்...
ஓ.. நீ தான் இல்லை அல்லவா ?
சண்டையிட்டுப் பிரிந்து விட்டாய்..
சரி... பிரிந்தால் போய் விட  வேண்டுமா என்ன ?
அந்த நீலப்படத்தை போடு ...
வேண்டாம்....
த்தூ.... மொழுக்கட்டையென்று...
நேற்றே மோசமாக சலித்து விட்டது
விஜய் ஆண்டனியை கத்தவிட்டு விட்டு
கொஞ்சம் ஆட்டம் போடுவோமா இன்று ?
உனக்கு புத்தியே வரவில்லை இன்னும்...
“ இன்று” என்று முடிக்காதே...
“ இன்றில் “ என்று முடி...
 உடனே இது சிரீயஸ் கவிதை ஆவதைப் பார் !





பிரிவு

$
0
0

புழங்கும் சொல்தான்
என்றாலும், பொருள் தேடிப் பார்த்தேன்
விஷமம் பிடித்த அகராதியொன்று
"பிரிவு என்பது
இமைப்பொழுதும் நீங்காதிருத்தல் “ என்கிறது .

வாழி !

$
0
0
உனக்கும் எனக்குமிடையில்
ஒன்றுமில்லை
என்பதற்குப் பதிலாக
இருக்கிறது இந்தச் சண்டை. 
இது வாழி!

ஒழி !

$
0
0

அவ்வளவு ஜ்வலிப்பு
என் கண்களுக்குப் பழக்கமில்லை
எனவே
உன்னை எடுத்து ஓங்கி உடைத்தேன்
இப்போது
மங்கிய குண்டுபல்பின் கீழே
ஆசுவாசமாய் பீடி புகைக்கிறேன்

எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

$
0
0
             




எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !

கொண்டை சுற்றுவதில் வல்லவரான கடவுள்
ராணி ஸ்ரீயையும், நீலிஸ்ரீயையும்
உன்னோடே கலந்துகட்டி
என் முன்னே அனுப்பினார்
அதில் எந்தக் கொண்டை உன் கொண்டை
என்றறிவதில் 
பரிதாபமாகத் தோற்றுவிட்டேன் ...
எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !


எவ்வளவு குடித்தாலும் 
ஒழுங்காக வீடு  சேர்ந்து விடுவேன்
லுங்கிவிலகி நான் ரோட்டோரம் கிடந்தது 
ஒரே ஒரு நாள்தான் ...
சரியாக, மிகச்சரியாக
அன்று தான் உன் வீட்டில்  தேங்காய்ச் சட்னி
தீர்ந்துவிட்ட  பொட்டுக்கடலையை வாங்கி வர
நீ அண்ணாச்சி கடைக்கு வந்தாய்...
ஏன் வாணி உன் வீட்டில் அன்று தக்காளி சட்னியாக
இருந்திருக்க கூடாது ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


அப்படி தக்காளிசட்னியாகவோ, கத்தரிக்காய் குழம்பாகவோ மட்டும்
இருந்திருந்தால்
இன்னேரம் நமது வசந்தத்து மாளிகையில்
இரண்டு “தேன்கள் ” ஓடியாடாதோ வாணிஸ்ரீ ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


கொஞ்சம் குடித்தால்தான்
அந்த அறையின் கதவுகள் திறக்கின்றன
அங்குதான் அந்த வீணை இருக்கிறது
அங்குதான் நீயும் இருக்கிறாய்
நீ வாசிக்கக்  கூட வேண்டாம் வாணிஸ்ரீ
வெறுமனே அது உன் தொடையில் இருந்தால் போதும் ...
இதையெல்லாம் கண் ஆரக் காணாமல்
கேவலம் ஈரலைப் போற்றி வாழ்வேனோ வாணிஸ்ரீ !


ஒரு முறை கூடத்  தொட்டுப் பார்த்திடாத
அதனாலேயே
ஆயுள் முழுக்க தொட்டுதொட்டுப் பார்க்கும்
உன் காந்தள் மெல்விரல் கைகளால்
தினம்  ஒரு குவளை வழங்கு ...
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

நேற்று பல் மருத்துவரை கண்டு வந்தேன்
கடைப்பல்லை முற்றாக பூச்சி அரித்து விட்டதாம்...
இனி அடைக்கவே முடியாதென்றும்
பிடுங்கியே தீர வேண்டும் என்றும் சொல்லி விட்டார்
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

ஒரு தொண்டுக்கிழம்
“ நான் தான் ஆனந்த் ...”
என்று முன் வந்து நின்றால்
ஊரார் எதில் நகுவார் வாணிஸ்ரீ ?

எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


                        






















ஓட்டுநர்

$
0
0
                                     
   





கறுத்த முகத்தில்
நரையோடித் திரண்டிருந்தது
தோளில் அழுக்குத் துண்டோடு
காக்கிச்  சீருடையில் இருந்தார்
வார் அறுந்த செருப்பைக் கண்டு
பிழையாக
ஒரு கணம்  இரக்கம் கொண்டு விட்டேன்
அப்போதுதான்
அவர் தன் சைனா பொபைலை
வெளியே எடுத்தார்
எதையோ தேடி முடுக்கி விட
"வானம் தாலாட்டி  மேகம்  தள்ளாடியது "
கமலை விடவும் பிரமாதமாக  தலையாட்டுகிறார்
பாடகனை  விடவும்  பிரமாதமாக  பாடுகிறார்
என்னைக் காட்டிலும் பத்து மடங்கு லயிக்கிறார்
ஐயா... என்ன ஓட்டுகிறீர் ?
புஷ்பகவிமானம் தானே ?


                                                       நன்றி : ஆனந்தவிகடன்   
Viewing all 790 articles
Browse latest View live