Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all 793 articles
Browse latest View live

குத்துப்பாடல்களுக்கிடையே ஒரு ஆட்டம்

$
0
0
        
                                                                                
        

   


நண்பர்செந்தில்  தான்புதிதாகதுவங்கஇருக்கிறமின்னிதழுக்காக  பொறுப்பானவேலையொன்றைதந்துசெய்துதரச்சொன்னார். அப்போதுநான்பொறுப்பானவேலைகள்எதுவும்செய்யும்மனநிலையில்இல்லை. ஆனாலும்முதல்இதழ்என்பதால்செந்திலுடன்இருக்கவிரும்பினேன். ஆகவே பொறுப்பற்றவேலையொன்றைசெய்துதருவதாகஒப்புக்கொண்டேன்.அதுவேகுத்துப்பாடல்கள்பற்றியஇக்கட்டுரை. அவற்றுடன் இடையறாத   புழக்கத்தில் இருப்பவன்என்பதால் 
சொந்தமண்ணில்சதமடித்துவிட்டுஸ்டைலாக மட்டையைத்தூக்கிக்காட்டிக்கொள்ளலாம்என்பதுஎன்தந்திரமாகஇருந்தது. ஆனால்தகதகதகதகவெனஆடவா… “ , “ சித்தாடைகட்டிக்கிட்டு…” எனத்துவங்கிவாமச்சா ..வாவண்ணாரப்பேட்டை…” , “பல்லஇளிக்கிறவ.. தொல்லகொடுக்குறவ ..”  என சுற்றித்திரிந்து டாங்காமாரிஊதாரி
 வழியேவெளியேவருவதற்குள்போதும்போதுமென்றாகிவிட்டது. என்னதான்பொறுப்பற்றவேலையாகஇருந்தாலும்அதற்கும்கொஞ்சம்  பொறுப்புவேண்டும் போலும்.
·         
           
       ஒருசிறுவன்இந்தஉலகில்சற்றேநீண்டுகிடக்கும்எதுவும்அவனுக்குஒலிபெருக்கிதான். பல்துலக்கும்குச்சியைவைத்துக்கொண்டுமணிக்கணக்காகபாடிக்கொண்டிருப்பான். தான்ஒருபாடகன்என்பதில்அவனுக்குபொட்டுசந்தேகம்கூடஇருந்திருக்கவில்லை. எல்லாசிறுவர்களும்தங்கள்பால்யத்தில்குத்துப்பாடல்களின்ரசிகர்களாகஇருக்கிறார்கள். பிறகுஅவர்கள்கனவான்களாகவும், கோமான்களாகவும்வளர்கிறார்கள். அச்சிறுவன் ஒருபாடலை கேட்டுக்கொண்டிருந்தான்.
எஸ்.பி.பியும், ஜானகியும்பாடிக்கொண்டிருந்தார்கள்.
அவனும் கூடவேபாடிக்கொண்டிருந்தான்.  “அடியேய்.. மனம்நில்லுனாநிக்காதடி .. “ என்றுபாடிக்கொண்டிருந்தஎஸ்.பி.பிஅப்படியேபாடிஅப்பாடலைமுடித்திருக்கலாம். ஆனால்ஒருகட்டத்தில்பையன்              “அடியே..”  என்றுபாட ,  அவர்அடீஏய்என்றுபாடிவைத்தார். ”அடீ
க்கும்ஏய்க்கும்இடைப்பட்டஅந்தஒருநொடிமெளனத்தில்பையனுக்குஅழுகைபொத்துக்கொண்டது. தனக்குபாட்டுவரவில்லையென்றும், தான்ஒருபாடகனாகஆகப்போவதில்லைஎன்றும்அவனுக்குதெளிவாகதெரிந்துவிட்டது. அதுஒருசின்னநகாசுவேலைதான் என்பதைஅப்போதுஅவன்அறிந்திருக்கவில்லை. அவன்தொட்டித்தண்ணீரைவாரிவாரிமுகத்தில்அறைந்துகொண்டான். அச்சிறுவனின்இக்கட்டுரையைநீங்கள்ஆசீர்வதிப்பீராக !
·         
                    
      குத்துப்பாடல்கள்என்பவைஒருதனித்தஇசைவகைமையல்ல.அதற்குதனித்தஇலக்கணங்கள்இல்லை. தோற்கருவிகள்அதிகம்முழங்குவதால்இப்பெயர்வந்திருக்கலாம். ஆட்டம்நிற்காதஒருமனம்தவித்துச்சூட்டியபெயராகஇதுஇருக்கலாம். இதற்குமுன்டப்பாங்குத்துஎன்றபெயரில்இதுஅழைக்கப்பட்டது. “ டப்பாஎன்கிறமுன்னொட்டுஇதன்கீர்த்திக்குகுந்தகம் விளைவிப்பாதாக கருதிய ரசிகமனம் காலத்தில் அதைகழற்றிவிட்டுவிட்டது. இதற்குஇன்னொருகாரணமும்இருக்கலாம் . இன்றையகுத்துப்பாடல்களுக்குவெறும்டப்பாவைகுத்துவதுபோதுமானதாகஇல்லை. இன்றுஅதற்குநிறையகருவிகள் , நிறையசத்தங்கள்தேவைப்படுகின்றன. வெவ்வேறுஇசைவகைமைகள்அதனுடன்கலந்துவிட்டன. பல்வேறுவகையானகிராமியப்பாடல்கள் , பழங்குடிப்பாடல்கள், கானாபாடல்கள், ராப் , ஹிப்- ஹாப்போன்றமேற்கத்தியஇசைவகைமைகளின்சாயைகள் இன்று குத்துப்பாடலுடன்கலந்துவிட்டன. எனவேஇப்போதுஅதன்சத்தமும்துடிப்பும்மேலும்கூடிவிட்டது. “  ஐடம்சாங்என்றஒன்றும்இங்குஉலவுகிறது. அதுவும்குத்துப்பாடலும்ஒன்றல்லஎன்றுநாம்அறிந்துகொள்வதுநல்லது. ஐடம்சாங்கிற்குகட்டாயம்ஒருபெண்ணுடல்தேவை. ஆனால்குத்துப்பாடல்களுக்குஅதுஅவசியமில்லை. அவைகுத்திலிருந்தேபிறக்கின்றன.

    பொதுவாககுத்துப்பாடல்கள்ஏளனத்துடன்தான்நோக்கப்படுகின்றன. ரசனைமட்டத்தின்அடித்தட்டில்வைத்துஅதுபார்க்கப்படுகிறது. ஒருகுறிப்பிட்ட சாராரின் இழிஅடையாளமாகவும்அதுகருதப்படுகிறது. கனவான்களை , வித்வான்களைஅதுமுகஞ்சுழிக்கவைப்பதாகஇருக்கிறது. “ சிந்துபைரவிபடத்தில்நாட்டுப்புறப்பாடல்பாடிய சிந்துகடைசியில்அதைலாவகமாககர்நாடகசங்கீதத்துடன்கலந்துகைதட்டல்களைஅள்ளிவிட்டாள். டப்பாங்குத்துபாடலைபாடத்துணிந்தஜே.கே.பி  அண்டர்வேருடன்  நிற்க  வேண்டியதாகிவிட்டது. எல்லாவற்றையும்புனிதப்படுத்தி பார்ப்பவர்கள்தான்  குத்துப்பாடல்களைதொடர்ந்து   இழிவுசொல்லிவருகிறார்கள். வீணையின்மீட்டலில்இருந்துமந்தகாசம்  பொங்ககடவுள்எழுந்துவருவாரெனில் , நமதுபறைக்குள்இருந்துஏற்றிக்கட்டியலுங்கியுடன்தொடைதெரியகுதிப்பதும்அவரே.

    “ குத்துப்பாட்டுங்கறதுவெறும் 6/8 சமாச்சாரமில்லை.. அதுஎத்தனையோமனிதர்களைலிபரேட்பண்ணிவிடுதுஎனக்குகுத்துப்பாடல்கள்பிடிக்கும்,, நானுன்நிறையகேட்பேன்.. ஆனாஅதமட்டுமே  கேட்டுட்டுஇருக்கமாட்டேன் ..அவ்வளவுதான்..”
               ( பாடகர்ஸ்ரீனிவாஸ்- தந்திடி.விநேர்காணல் )

  ஜான்தான்ஒருமுறைசொன்னார்..  “ இசை , எல்லாமனுசனுக்குள்ளையும்ஒரும்யூசிக்ஓடீட்டுத்தான்இருக்குன்னுநெனைக்கறேன். வெள்ளைக்காரனுக்குள்ளஒரு“ rock & roll “ கச்சேரிஎப்பவுமேநடந்துகிட்டேதான்இருக்கு.. அதுமாதிரியேநம்மஆளுக்குள்ளஒருசத்தம்கெடக்குது.. அதுஒத்தையடிதான்…”
அப்புறம்அந்த  “ டேபிளைவிட்டுஎழுந்துகொள்ளமேலும்அதிகநேரம்தேவைப்பட்டது.
    காரைக்கால்அம்மையாரில்ஆனந்ததாண்டவமாகஇருந்ததகதகதகதகவெனஆடவா..” தான் பிதாமகனில் குத்துப்பாடலாக மாற்றம்கண்டிருக்கிறது. திரு.சிவகுமார் அவர்களின் சிவநடனத்தையும்,  “ வாடீ.. மாப்ளே.. “ என்கிறசிம்ரனின்ஆவேசஅழைப்பையும்அருகருகேவைத்துப்பார்த்துஎதுஉங்கள்மனங்கொள்ளத்தக்கதோஅதைமனம்கொள்க.
    குத்துப்பாடல்கள்எளியமனிதர்களின்எளியமனங்களில்தொடர்ந்துவினைசெய்கின்றன. அவர்களின்சங்கீதமாகஅதுஒலிக்கிறது. நன்றாகஉண்ணமுடியாத , நன்றாகஉடுத்தமுடியாத , கேவலுமும்அவமானமும்கேவலமோஅவமானமோஇல்லைஎன்கிறவாழ்கையைவாழும்மனிதர்கள்மெல்லிசைகச்சேரியின்முன்குழுமியிருக்கிறார்கள். அங்குகே.வி.எம்மாமாவின்சித்தாடகட்டிகிட்டு… “  ஒலிக்கிறது. அதுகச்சேரிமுடியப்போகிறதுஎன்பதன்அர்த்தம்.  கோடிஇன்பங்கள்கொட்டிக்கிடப்பதாகச்  சொல்லப்படும்  இவ்வாழ்வில்,   நாலுஇன்பங்களுக்குகூடவக்கற்றஎம்சனங்கள்மனிதனாகமுதிர்ந்திராதகுரங்குகளைப்போல்ஆடுவதைநான்பார்த்திருக்கிறேன்.அதேகூட்டத்தில்சென்னைக்கு வழிதெரியாதஅச்சுஅசல்நடனக்கலைஞர்களையும்பார்த்திருக்கிறேன். கே.வி.மகாதேவன்எத்தனையோஅமரத்துவம்வாய்ந்தபாடல்களுக்குஇசைஅமைத்திருக்கிறார்.ஆனால்இந்தப்பாடல்எப்படியோஆர்க்கெஸ்ட்ராக்களில்தவிர்க்கஇயலாதபாடலாகஇடம்பெற்றுவிட்டது. இப்படியாக, மாமா கோவில்களிருந்துஎங்கள்வீதிக்குவந்துசேர்ந்தார். உறுதியாகசொல்கிறேன்..  இதுதான்மாமாபுண்ணியம்..
இந்தப்பாடலும்குமுதம்படத்தில்இடம்பெற்றமாமா.. மா..மா..மாமாபாடலும்தமிழ்த்திரைஇசைவரலாற்றில்காலம்அழிக்கத்திணறுகிறகுத்துப்பாடல்களால்களாக நிலைபெற்றுவிட்டனஇரண்டிற்கும்  இசை
 “ ஸ்வரபிரம்மாஎன்றழைக்கப்பட்டகே.வி.மகாதேவன்தான்என்பதைமகிழ்ச்சிபொங்ககத்திச்சொல்லவிரும்புகிறேன். இதுபோலவேஆர்கெஸ்ட்ராக்களில்கொண்டாடப்பட்டஇன்னொருபாடல்மனோஜ்கியான்இசையில்வெளிவந்தராத்திரிநேரத்துபூஜையில்”.

    பிள்ளைப்பருவத்தில்இருந்தேதோற்கருவிகளின்முழக்கத்திற்குமயங்குபவனாகவேஇருந்துவந்திருக்கிறேன். எட்டாம்வகுப்புபடித்துக்கொண்டிருந்தஒருமாலையில்பள்ளிவிட்டுவந்தததும்சீருடையைகூடகழற்றாமல்அம்மாமாரியம்மன்கோவில்திருவிழாவிற்குஅழைத்துப்போனாள். அங்குஜமாப்நடந்துகொண்டிருந்தது. தப்பட்டைகுச்சிஎன்கால்களைபிடித்து  இழுத்தது. திடுமுஉறுமிஉறுமிஅழைத்தது. ”மாட்டேன்மாட்டேன்..”  என்று  சொல்லிக்கொண்டிருந்தவன் மெல்லஎனக்குள்ஆடத்துவங்கினேன்ஒருகட்டத்தில்கூட்டத்துடன்கலந்தேன். ஆடுவதுஎன்றால்சும்மாஒருசுற்றல்ல.. கிட்டத்தட்டஒருமணிநேரம்மூச்சுமுட்டஆடினேன். அதுஅருந்ததியர்களின்குழுவாகஇருந்தது.அவர்களின்சீருடையும்காக்கியாகவே இருந்தது. காக்கிகளுடன்காக்கியாககலந்துநான்ஆடியஅந்தஒருமணிநேரத்தைஎன்வாழ்வின்அசலானகலைதருணம்என்றுதிமிராகச்சொல்வேன். இந்தஒருமணிநேரமும்என்அம்மாவிற்குள்இருக்கும் தேவச்சி“  எங்கேஓடிப்போனாள்என்பதுஎனக்குஇன்றுவரைவிளங்காதஒன்று. அதைவெகுநாட்கள்பெருமையாகவேறுசொல்லிக்கொண்டிருந்தாள்.” எம்பையன்.. அவங்ககூடசேர்ந்துஆட்டம்னாஆட்டம்அப்படியொருஆட்டம்”. குத்துப்பாடல்கள்உச்சத்தில்முழங்கும்தருணங்களின்அதன்முன்னே  அந்தகாக்கிட்ரவுசர்பையனாகத்தான்நான் இன்றும்நிற்கிறேன்.

            

     1956-ம்ஆண்டு  வெளியானஅமரதீபம்படத்தில்இடம்பெற்றுஜிக்கிபாடியஜாலிலோஜிம்கானாபாடலிருந்துதான் டப்பாங்குத்துதுவங்குவதாகஒருவரலாறுசொல்கிறது. அப்பாடலையொட்டி
தஞ்சைராமைய்யதாஸ்“  டப்பாங்குத்துபாடலசிரியர்என்றும்அழைக்கப்பட்டிருக்கிறார். அன்றுதுவங்கிஒவ்வொருகாலத்திலும்ஒருபாடல்மக்களைஆடவைத்துக்கொண்டேதான்இருந்திருக்கிறது.பல்வேறுபாடல்களைபாடியிருந்தாலும்கட்டவண்டிகட்டவண்டி”, “பொதுவாகஎம்மனசுதங்கம்என்று  துவங்கி  ”ஊருவிட்டுஊருவந்துவரைமலேசியாவாசுதேவன்ஒருகுத்துபாடகராகவேஅதிகமும்கொண்டாடப்பட்டார். சிலர்இதைஒருகுறையாகக்கூடசொல்வதுண்டு. அவர்பாடியதண்ணிகருத்திருச்சு..” , ”ஊருவிட்டுஊருவந்து..” ஆகியபாடல்கள்சமீபமாகரீமேக்செய்யப்பட்டுஒலிக்கின்றன. அவை  அவர்குரலின்மேலானஏக்கத்தைமேலும்கூட்டுகின்றன.
            சென்னையில்நடக்கஇருந்தஎன்புத்தகவெளியீடுஒன்றிற்காகநண்பர்கள்சிலர்சேலத்தில்குழுமிகிளம்பினோம். அது  “ கலாசலாகலசலா.. “ வந்திருந்தசமயம். டி.ஆரும் , எல்.ஆர்.ஈஸ்வரியும்சேர்ந்தடித்தஅக்கூத்துகாருக்குள் 50 முறைகளுக்கும்மேலாகஅரங்கேற்றப்பட்டது.
 ” மைடியர்டார்லிங்உன்ன.. மல்லிகாகூப்புட்ற.. “ என்கிறவரிகள்வெறியின்மயக்கத்தில்நம்மைபிடித்தபிசாசுகள்போயினஎன்பதாகக்கேட்டது. அதுபுத்தாண்டுதருணம். பொதுவாகநான்புத்தாண்டைநம்புபவனல்ல. ஆனால்அந்தராத்திரியில்மல்லிகாவைஅவ்வளவுநம்பினேன். அவள்எல்லோரையும்எல்லாவற்றிலிருந்தும்விடுவித்துவிடுவாள்என்றுஅவ்வளவுஉறுதியாகநம்பினேன். “ மைடியர்டார்லிங்உன்ன.. மல்லிகாகூப்புட்ற ..Happy new year “ என்கிறகுறுஞ்செய்தியைநண்பர்கள் , இலக்கியஆளுமைகள்என்றுபலருக்கும்அனுப்பினேன். சமயவேல், ரவிசுப்ரமணியன்போன்றோரிடமிருந்துஅதேதுள்ளலுடன்பதிலும்வந்தது. இப்போதுகேட்கையில்அப்பாடல்பொலிவற்றுஒலிக்கிறதுஆனால்அந்தராத்திரியின்பொலிவுமங்கிவிடவில்லை.
   இன்றுவெளிவரும்அநேகபடங்களில்ஒன்றோஅதற்குமேற்பட்டோகுத்துப்பாடல்கள் இடம்பெறுகின்றன. எல்லாபாடல்களும்ரசிகர்களின்மனம்கவர்ந்துவிடுவதில்லை. ஒருமனிதனின்அமர்ந்தகோலத்தைஆடும்கோலம்ஆக்குவதுஅவ்வளவுசுலபமல்ல. குத்துப்பாடல்ஒன்றும்மலிவுச்சரக்கல்லஎன்பதைஒருரசிகனாகவேஎன்னால்உணர்ந்துகொள்ளமுடிகிறது.அதுவும்பிறவகையினங்கள்கோரும்உழைப்பையும், ஈடுபாட்டையும்கோருபவைதான். தனதுகீதாஞ்சலிஆல்பத்தில்ராஜாஇவ்வாறுசொல்கிறார்இந்தபக்திப்பாடல்களில்   என்ஆன்மாவைகரையவிட்டிருக்கிறேன்.. இப்பாடல்களைகேட்கின்றஜீவன்களில்ஒரேஒருஜீவனாவதுஇவன்  தன்ஆன்மாவை  இதில்கரையவிட்டிருக்கிறான்என்பதைஉணர்ந்தால்நான்ஜென்மம்எடுத்ததின்பயனைஅடைந்ததாகஎண்ணிமகிழ்வேன்”.   “கானக்கருங்குயிலே.. “ பாடலிலும்தான்அவர்தன்ஆன்மாவைகரையவிட்டிருக்கிறார். ஆனால்அதைஅவர்சொல்லமாட்டார். நாமேதான்சேர்த்துபுரிந்துகொள்ளவேண்டும்.
 “ மலரேமெளனமா..”  வித்யாசாகரின்நெற்றிப்பொட்டிலிருந்தும்,
மச்சாமீசைவீச்சருவா .. “ அவரின்குதிகால்வெடிப்பிலிருந்தும்பிறந்தவையல்ல. இரண்டும்அவர்நெஞ்சிலிருந்துவந்தவையே.  ”வேணாம்மச்சாவேணா.. இந்தபொண்ணுககாதலுபாடலில்முதல்சரணம்முடிந்தபிறகுஒருதேம்புதல்துவங்கும். முழங்காலில்சூட்டப்பட்டநெற்றிச்சுட்டி  அது. அப்படத்தின்கோமாளித்தனத்திற்கோ, அப்பாடலின்பொக்கைவரிகளுக்கோஅத்தேம்புதலைபெறஒருஅருகதையும்இல்லைதான்.அதுஉள்ளேஒளிந்துகொண்டிருக்கிறது. ஆனாலும்காதைக்கொடுத்தால்உருக்கிவிடக்கூடியதுதான். குத்துப்பாடல்என்றுஇளக்காரம்செய்யப்பட்டுஒதுக்கப்படும்ஒன்றிற்காக  ஒரு இசையமைப்பாளன்இவ்வளவுமெனக்கெடுவான்எனில்ஒருஎழுத்துக்காரன்தன்எழுத்திற்குஎவ்வளவுமெனக்கெடவேண்டும்என்றுஇப்பாடலையொட்டிநான்யோசித்ததுண்டு.
        தேவாகானாபாடல்களையும்குத்துப்பாடல்களையும்கலந்துநிறையஹிட்பாடல்களைவழங்கியிருக்கிறார். அதிகம்அறியப்படாதஆனால்குத்துப்பாடல்ரசிகர்களின்அபிமானபாடல்ஒன்றுசூரியன்சட்டக்கல்லூரி .. “ படத்தில்இடம்பெற்றரீகரீகரீகரீகமோபாடல். ”மதுரைசின்னப்பொண்ணுகுரலில்ஒலிக்கும்அப்பாடல்நிஜமாலுமேசெமகுத்து.
       ஒருவிடுமுறை  ஞாயிறு. லேட்டாகஎழுந்துகண்களைத்தேய்த்தவாறுடி.வியைப்போட்டேன். அதில்கோமாளிபோன்றஒருமனிதன்தன்சுட்டுவிரலைஅப்படியும்இப்படியும்ஆட்டிக்கொண்டிருந்தான். அதுபார்க்கஅவ்வளவுகுதூகலமாகஇருந்தது. அதன்சத்தமும்ஆட்டமும்புதிதாகஇருந்தது. பாடல்முடியும்வரைஒருபல்லியைப்போல்சுவரில்ஒட்டிக்கொண்டுநின்றேன். அந்தப்பாட்டைகேட்கஊர்திரண்டுவிடும்என்பதுமுதன்முதலாககேட்டஅந்தமுக்கால்வாசிபாட்டிலிலேயேதெரிந்துவிட்டது. அப்பாடல்“  வாலமீனுக்குவெலங்குமீனுக்கும்கல்யாணம்“. இந்தஇடத்தில்குத்துப்பாடல்கள்படமாக்கப்படும்விதம்பற்றிகொஞ்சம்பேசலாம். குத்துப்பாடல்கள்இயல்பாகவேநடனத்துடன்தொடர்புடையவை. உண்மையைச்சொன்னால்பலகுத்துப்பாடல்களும்பார்க்கச்சகிக்காதவை. மோசமாகஎரிச்சலூட்டக்கூடியவை.பெண்களைகுறையுடையில்காட்டினால்போதும்என்கிறபொதுநம்பிக்கையுடையவை.  ”வீரம்படத்தில்இடம்பெற்றஜிங்ஜிக்கா .. “ பாடலைமுதலில்பார்த்தேன். பிறகுகேட்டேன். பார்த்தபோது, ”நமக்குசிகரெட்குடிக்கும்பழக்கம்இல்லாமல்போய்விட்டதே…”  என்றுரொம்பவும்வருந்தினேன். பிறகுகேட்டபோதுஅட.. அந்தபாட்டாஇது..’ என்றுஆச்சர்யப்படவைத்தார்குப்புசாமி. புஷ்பவனம்குப்புசாமியும், தேவிஸ்ரீபிரசாத்தும்சேர்ந்துகொடுத்தஇன்னொருபாடலும்எனக்குபிடித்தமானது. அதுகாத்தாடிபோலஏண்டிஎன்னசுத்துற.. “. மாயாவிபடத்தில்இடம்பெற்றது.  இப்பாடலைபார்க்கவும்செய்யலாம். கேட்டபோதுபுல்லரிக்கசெய்தபலபாடல்கள்பார்த்தபோதுபெருத்தஏமாற்றத்தைஅளித்தஅனுவம்பலருக்கும்இருக்கும். எனக்கும்அந்தஅனுபவம்உண்டு. முன்புநான்சிலாகித்துச்சொன்னகலாசலகலசலா..,  “ .. பேருமீனாகுமாரி’ ( கந்தசாமி ) போன்றபாடல்கள்மோசமாகஏமாற்றியவை. ஆனால்மிஷ்கின்தன்படத்தில்  இடம்பெற்றிருக்கிறஇரண்டுகுத்துப்பாடல்களைஅதன்உட்சபட்சஅழகியல்சாத்தியங்களுடன்படமாக்கியிருக்கிறார். 1956 – ல்தோராயமாகதுவங்கும்குத்துப்பாடல்வரலாற்றில்அவருடையவாலமீனுபாடலும் , ”கத்தாழகண்ணாலபாடலும்தவிர்க்கஇயலாதவண்ணம்   இடம்பிடிப்பதில் அவைபடமாக்கப்பட்டவிதத்திற்குஒருமுக்கியபங்குண்டு.
   குத்துப்பாடலாவது நவண்டைகடிக்கச்செய்வது.  மாறாக , ராஜாகண்செருகச்செய்யும்பலகுத்துப்பாடல்களைவழங்கியிருக்கிறார்.இக்கட்டுரைக்காகமுதன்முதலில்கேட்டபாடல் “  “ஆட்டமா .. தேரோட்டமா ..”  பாடல்.  கேட்டுமுடிக்கையில்இதுகுத்துப்பாடலேஅல்லஎன்றுதோன்றிவிட்டது. ஒருகுத்துப்பாடலுக்குஎதற்குஇவ்வளவுஅலங்காரம்..?  எதற்குஇவ்வளவுமயக்கடிக்கும்இசைசேர்க்கைகள்?  என்றுதோன்றியது. குத்துப்பாடல்என்றால்என்னஎன்கிறஆதாரமானகேள்வியையும்அதுதோற்றுவித்தது. ராஜாவும்
ராவானகுத்துப்பாடல்கள்பலதைதந்திருக்கிறார்என்பதுஅனைவரும்அறிந்ததுதான். காலத்தேசற்றுபின்னோக்கிப்போய்அப்படியானஒன்றைகேட்போம்என்றுகிளம்பியநான்தவறுதலாககேட்டுவைத்தது
தண்ணீ.. கருத்திரிச்சு..” பாடலை.    சாமீ..! இப்பாடலில்சரசக்காட்சிகளுக்குசத்தத்தைகுறைத்தும், ஆட்டக்காட்சிகளுக்குஏற்றியும்வைத்தபுண்ணியவான்யாரோ, அதுஸ்ரீதரரோ, ராஜாவோயாராயினும்அவருக்குஎன்அநேககோடிநமஸ்காரங்கள்ஒருகுத்துப்பாடலுக்கு  நவண்டைக்கடிக்கசெய்வதுபோதுமானதுதான். கூடவேகண்செருகவும்வைக்கமுடியும்என்பதை நீரூபிப்பவைராஜாவின்பாடல்கள்.
  



     இக்கட்டுரையின்நோக்கம்குத்துப்பாடல்களுக்குமுடிசூட்டுவதல்ல. மாறாகஅதன்தகுதிக்கேற்றஇடத்தை நிறுவவிழைவதுதான். எனக்கும்குத்துப்பாடல்களின்மேல்விமர்சனங்கள்உண்டு.  அதற்குஒருகுறையாடைப்பெண்அவசியமில்லைஎன்கிறபோதும்அதுஅதிகமும்பெண்னுடலைதின்னக்குடிக்கும்சாராயமாகவேமாற்றப்பட்டுவிட்டது. இதுஅதன்பெரியபலஹீனம். அதனைதூஷணைசெய்வோருக்குசிக்கும்எளியசாக்காகஇதுஅமைந்துவிட்டது.
           





     கருப்பினமக்களின்இசையாகமேற்கில்பிறந்தவைஅதன்அரசியலோடுதான்ஒலிக்கின்றன. தன்மக்களின்பாடுகளை,  விடுதலைவேட்கையைஅவைபாடுகின்றன. ”தமிழ்ராப்பாடலாகஆடுகளம்படத்தில்இடம்பெற்றிருக்கிறவாழ்க்கைஒருபோர்க்களம்என்அபிமானத்திற்குரியது. ராப்பாடல்களில்எளியமனிதர்களின்கொச்சைச்சொற்கள்தாராளமாகபுழங்குகின்றன. அவைஅப்பாடலுக்குஒருதனித்தஅழகியலையும்வழங்குகின்றன.
வெளக்கென்னநீஇனிமேஎன்னதொடாதே”..(வெளக்கென்ன/நீ/இனிமே/
என்னதொடாதே) என்கிறவரிஒருகருப்பினமனிதனின்குரலாகஒலிக்கையில்கொள்ளும்அர்த்தரூபம்கிளர்ச்சிகரமானது. இப்பாடலின்இடையேஒருநொடிக்குள்ஒலித்தடங்கும்ங்கொய்யாலஎன்கிறசொல்தரும்பரவசமும்அலாதியானது. அதுதன்ஆண்டையைநோக்கிவரலாற்றின்கோபத்தோடுகத்துகிறது. எனக்குஇப்பாடலின்ஒவ்வொருசொல்லும்ங்கொய்யாலஎன்றேஒலிப்பதாகதோன்றியது.
 ”வெல்வோமே…. வீழாமல்... ” என்றுகனத்தகரகரப்பில்முழங்கும்இப்பாடலைதாராளமாகநமதுமுற்போக்குஅரசியல்மேடைகளில்ஒலிபரப்பலாம். நமதுகுத்துப்பாடல்களிலும்கொச்சைசொற்கள்உண்டு. ஆனால்அவைவெறும்கொச்சைசொற்கள்மாத்திரமே.
                 “ வத்திப்பெட்டினாவத்திப்பெட்டினா
                   குச்சிகஒரசத்தான்
                   பத்திக்கிச்சுனாபத்திகுச்சுனா
                   பீடிகுடிக்கத்தான்.. “

போன்றவரிகள்ஒரு  லேசானசிரிப்பைவரவழைக்கத்தான்செய்கின்றன.எனக்கும்இந்தஅர்த்தமின்னையின்சிரிப்புபிடித்துத்தான்இருக்கிறது. ஆனால்அதுமட்டும்போதுமானதாகஇல்லை. மேற்கில்இருப்பதுபோல்இங்கு“ popular music “ என்றுஒருதனிவகைஇல்லை. இங்குசினிமாஇசைதான்“ popular music “.  கானாபாடல்கள், பழங்குடிப்பாடல்கள், கிராமியப்பாடலக்ள், ராப்பாடல்கள்என்றுஎவைசினிமாஇசைக்குள்நுழைந்தாலும்அவைசினிமாபாடல்களாகமாறிதன்குணாதிசியங்களைஇழந்துவிடுகின்றன. அங்குஇவைஇயல்பாகவேஅரசியல்நீக்கம்செய்யப்பட்டுவிடுகின்றன. வெற்றுகேளிக்கைபொருட்களாகமாறிவிடுகின்றன. ஒருமனிதனுக்குகேளிக்கைஅவசியம்தான். எத்தனையோ இடிபாடுகளுக்குள்சிக்கிக்கொண்டிருக்கும்அவன்கேளிக்கைகளில்தான்சற்றுமூச்சுவிடுகிறான். ஆனால்ஒருவனைமுழுக்கவும்கேளிக்கைகளால்நிரப்புவதென்பதுஒருவகையில்அவன்புத்தியைமழங்கடிக்கும்செயல்தான்.  நமதுகுத்துப்பாடல்களின்முகத்தைசற்றேமாற்றிவைத்தால், அதைபறையிசையைப்போலஒருஅரசியல்வடிவமாகமுன்னெடுக்கமுடியும். அதற்கானமுழுதகுதியையும், பெருந்துடிப்பும்அதனுள்ளேநிச்சயம்உண்டு
                                                                     நன்றி : கபாடபுரம்.காம்
                                                                                 http://kapaadapuram.com/
                                                                   

காதல்

$
0
0



இரண்டுநாட்களாகநோக்கத்துவங்கிஇருக்கிறோம்.
இருவரிடமும்நாசூக்குகூடிவருகிறது.
அவள்கடைக்கண்ணில்
அந்தப்பாம்புக்குட்டியயைப் பார்த்துவிட்டேன்.
எனக்குபயந்துவந்துவிட்டது.
மூன்றாவதுநாள்
நேராகப்போய்இந்தவீக்எண்ட்லமகாபலிபுரம்போலாமா? “
என்றுகேட்டுவிட்டேன்.
செருப்புபிஞ்சுடும்..” என்றாள்.
ஒருசெருப்படியோடு போனது.
வெற்றுடம்பில்
எண்ணெய்ச்சவுக்கால்
ஓங்கியோங்கி விளாசிக்கொள்வதுமிச்சம்.


வெள்ளிக்கிழமைகளின் பளிச்

$
0
0




           வெள்ளை முதுகும்
           மஞ்சள் கயிறும்
           ஒன்றாக பளிச்சிட்டால்
           யாது செய்வேன்
           என் அம்மையே !?

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவு

$
0
0




அவள் அழைத்த அப்பொழுது
ரயில்படிக்கட்டில் அமர்ந்திருந்தேன்.
வானத்தில் பூர்ணிமை பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அப்பொழுது அதனுடன் மட்டுமே பேசத்தோன்றியது
ஆகவே ஃபோனை எடுக்கவில்லை.
திரும்பவும் வந்த அழைப்பை
வேறு உலகத்திலிருந்து வந்து விழும் கல் போல் உணர்ந்தேன்.
எனவே அதை துண்டித்துவிட்டேன்.

இன்னொரு நாள் அழைக்கையில் அலுவலகத்தில்
பழைய ஃபைலொன்றை தேடிக்கொண்டிருந்தேன்.
அவளை விடவும்
அப்படியொன்றும் முக்கியமான ஃபைலில்லை தான்.
ஆனாலும் எடுக்கவில்லை.


மூன்றாவது முறையாக அழைத்த போது
இரண்டு காரணங்களை சொல்ல வேண்டியிருந்ததால்
எடுக்கவில்லை.


நான்காவது முறைக்கு 3 காரணங்களையும்
ஐந்தாவது முறைக்கு 4 காரணங்களையும்
கண்டறிய வேண்டியிருந்தது.

அடுத்தடுத்த அழைப்புகளில்
பிரியம் பூதமென்றாகிவிட்டது.

விட்டுவிடவே கூடாத அன்புதான்
ஆனாலும் விட்டுவிட்டேன்.

எல்லாம் அந்த “ பூர்ணிமாவை சொல்ல வேண்டும்!

                           நன்றி : ஆனந்த விகடன்

ஐயோ… இந்தக் கரிப்பு !

$
0
0



எனக்கு எம்ஜியாரை அறவே பிடிக்காது
அதிகாலையிலேயே
அவர் கவுண் உடையில் தோன்றி
ஏதோ சூளூரைத்துக்கொண்டிருந்தார்.
எனவே சேனலை மாற்றினேன்.
மாற்றிய கையோடு  எதேச்சையாய்
கண்ணாடி பார்க்க
அது ரசமிழந்து உளுத்திருந்தது.
அதை மாற்றினேன்.
அழுக்கு அரசாளும் சீப்பை மாற்றினேன்.
இந்த பாத்ரூம் பைப்பை மாற்ற வேண்டுமென்று
பல்லூழிகளாக எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று அதை மாற்றினேன்.
அண்ணாந்து நோக்க
COFFE- யும் , தினசரியுமாக
பால்கணியில் வீற்றிருந்தான் எதிர்வீட்டு சீமான்.
அவனை மாற்றினேன்.
என் மொபட்டை
பள்ளத்துள் ஒதுக்கிவிட்டு பறக்கிறது ஒரு “ SCORPIO”
அதை சைக்கிளாக மாற்றினேன்.
பணிமனையில் பக்கத்துசீட்டில்
எப்போதும்
ஓர் “ அப்போது அலர்ந்த தாமரை “
அதை மாற்றினேன்.

உணவுவேளையில்
சோற்றுப்பொதி திறந்து அமர்ந்தால்
10 வாழ்க்கைகான உப்பை
அள்ளிக் கொட்டியிருந்தாள்  பத்தினி.
அந்த ரிமோட்டை
என் நெற்றிப்பொட்டில் வைத்து
ஒரு அழுத்து அழுத்தினேன்.

நூல் அறிமுகம்- அந்திமழை இதழில்

காவியம்

$
0
0


சூம்பிய கால்களுடன்
முறுக்கிய கைகளுடன்
கோணித்தவாய்ச் சிறுவனொருவன்
இந்த இரயில் பெட்டியின்
நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.
அவன் தலை சீட்டில் உருள்கிறது.
ஏனெனில், அதன் மடிக்கு கனத்து விட்டது.
கனத்தவள்
ஜன்னலோரத்தில்
ஓரத்தின் ஓரத்தில்
இடுங்கிப் போயிருந்தாள்.
அவள் வெளியே வெறித்த படி வந்தாள்.
வெளியே கை விட்டு  காற்றை துழாவினாள்.
வெளியே தலை நீட்டி அங்குமிங்கும் பார்த்தாள்.
பாதி உடலை கம்பிக்குள் செருகி
இதோ, பறந்து போகிறாள்.



ஆட்டுதி அமுதே !

$
0
0




இந்த அதிகாலை பயணிகள் இரயிலில்
சுண்டல் வாடையொடு கலந்து
துயரவாடை வீசிக்கொண்டிருக்கிறது.
குழந்தையான சிறுவனொருவன்
என்னெதிரே நீண்ட இருக்கையில் கிடக்கிறான்.
இடுப்புக்கு கீழே இரண்டு குச்சிகள்
ஒன்று மற்றொன்றின் மீது அணைந்து கிடக்கிறது.
சுண்டுவிரலைப் போன்றதான
கட்டைவிரல் வாயைப் போன்றதான ஓட்டைக்குள்
அழுந்திக்கிடக்க
நிலைகொள்ளா விழியிரண்டும் எங்கேயோ வெறிக்கின்றன.
புதிதாய் வந்தமரும் ஒரு இளைஞன்
தன் ஸ்மார்ட் ஃபோனை  முடுக்கி விடுகிறான்.
“டங்காமாரியான ஊதாரிஎங்கள் பெட்டிக்குள்
வந்து குதித்தான்.
நான் அந்த இளைஞனை
அவன் ஃபோனை
அந்தக் காலத்தை முறைத்துக்கொண்டிருந்தேன்.
பார்க்கவே கூடாது என்று
முகம் திருப்பியிருந்த படியால்
பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என்று தோன்றிக்கொண்டிருந்தது.
நாசூக்காய் ஓரக்கண் ஓட்டுகையில்
கண்டேன்
அந்தக் குச்சிபாதம் ஆடிய ஆட்டம்…
அப்படி.... ! அப்படி... !
விளங்காத காலே ஆயினும்
அதை அப்படி ஆட்டு
என் செல்லமே!

                     நன்றி : ஆனந்த விகடன்

தலைவி அரற்று

$
0
0

ஒரே ஒரு முறை
அள்ளி அணைத்திருந்தால்
ஒரு வேளை
செத்துப் போகாதிருந்திருப்பான்.
நான் தான்
என் முலைகளை
ஒரு கடுவனுக்கு எழுதி வைத்துவிட்டேன்.

நாட்டுவளம் உரைத்தல்

$
0
0
                                         
                               


இந்தமுறைஊடலல்லமுறிவு.
பட்டென்றசத்தத்துடன்
 ஒட்ட  முடியாதபடி உடைந்துவிட்டது.
எழுந்துநின்றுஒருமுறைசடவுமுறித்தேன்
அப்பாடா…” சொன்னால்தான்ஒழுங்காகசடவுமுறியும்
ஆகவேமுறைப்படி இழுத்துச்சொன்னேன்.
ஐந்தாண்டுகளாக  அடக்கியாண்டதொப்பைக்குவிடுதலையளித்தேன்.
இனிமூச்சுப்பயிற்சிக்குசோலிகிடையாது.
மீசைக்குள்கத்தரியுடன்குதிக்கவேண்டியதில்லை.
பெருவிரலில்மண்வெட்டிவளர்ந்தால்
நறுக்கவேண்டியதில்லை.
மண்டைக்குடுவையில்கண்டதையும்கலக்கி
பொய்செய்யஅவசியமில்லை.
நிலவுதன்சொந்தமுகத்தோடுதிகழ
இராத்திரியைகூட்டவோகுறைக்கவோதேவையில்லை.
ஆகவேசேவல்கள்தப்பிப்பிழைத்துவாழும்
நாடெந்தன்நாடே!

                                               நன்றி : கல்கி தீபாவளி மலர்

மொழி

$
0
0


         
 “ feel good movies” என்கிற பதத்துடன் கூடவே நினைவில் எழும் படங்களில் பிரதானமானது “மொழி”. பிருத்விராஜின் முகத்திலும், கொஞ்சு தமிழிலும் இயல்பிலேயே ஒரு “feel good “ உண்டு. ஆனால் படத்துக்கு இந்த மென் உணர்வை வழங்கும் காரணி எதுவென்று அவ்வளவு தீர்க்கமாக சொல்ல முடியவில்லை. ஒரு வேளை அது ஒன்றாக இல்லாமல் பலவாக இருக்கலாம். ஒருவர், “ சாலையின் கறுப்பு-வெள்ளை கோடுகளை கீ- போர்டாக்கி ஆடும் நடனத்தில் மகிழ்ந்தாரெனில், இன்னொருவர் அந்த உயர்தர அப்பார்ட்மெண்ட் வீட்டின் கலையழகிலும், அந்த “ bean bag “ –ன் சொகுசிலும்” மயங்கி இருக்கலாம். ஓர் ஊமைப்பெண்... அவளைக் கண்டு காதலுற்று பிரிந்து வருந்தி கடைசியில் சுபமாக கைபிடிக்கும் ஒரு இசைக்கலைஞன்.. இவர்கள் இருவரைப்பற்றிய படம் என்று எளிமையாக சொல்லலாம். அவன் சாதாரண மொழியில் புழங்குபவன் கூட அல்ல, இசையின் மொழியில் புழங்குபவன்.. அவளோ பேசவே முடியாதவள் எனும் போது படத்தின் கனம் கூடுகிறது. அம்மாவையும் தன்னையும் நிராதரவாக விட்டுவிட்டு அப்பா வேரொருத்தியோடு போய்விடும் போது, ஸ்தம்பித்து போகிறாள் நாயகி. + 2 படிக்கும் தன் பையன் சாலை விபத்தில் பலியான 1984 –லேயே ஸ்தம்பித்து நின்று விடுகிறார் ஒரு “professor “. இருவரும் இந்த வாழ்க்கைக்கு எதிராக முகத்தை திருப்பிக் கொள்கிறார்கள். படம் முடியும் தறுவாயில் ”பெரிய அழுகைக்குப்” பின் இந்த இருவரும் ஸ்தம்பித்தலில் இருந்து இயக்கத்திற்கு வருகிறார்கள்.மொழி படத்தை இப்படி பார்க்கையில் இன்னும் ரசமாக தோன்றுகிறது.
          படத்தில் ஜோதிகா, ப்ரித்வி, பிரகாஷ்ராஜ் அனைவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். ஜோதிகா ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்களெனினும், என் தனிப்பட்ட ரசனையில் “மொழி” என்றவுடன் நினைவுக்கு வருவது எம்.எஸ்.பாஸ்கரின் முகம்தான். கூடவே “ mark my words “ என்கிற புரபெசர் தனமான வசனமும். முதல் காட்சியில் தொடங்கி படம் முடியும் வரை ரசிக்கும்படியான நகைச்சுவைத்துணுக்குகளை தாராளமாக வைத்துள்ளார் விஜி. கூடவே, படத்தின் கதையோட்டத்திற்கு துணை செய்யும், அதன் மென்மைத்தன்மையை போற்றிப் பாதுகாக்கும் வசனங்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் தனக்கு எந்த மாதிரி மனைவி வேண்டும் என்பது பற்றி நாயகன் நாயகியிடம் உரையாடும் காட்சியின் வசனங்களை சொல்லலாம். அக்காட்சியில் “ அவ என்ன புரிஞ்சிருக்கறவளா இருந்தாவே ...என்னோட இசை அவளுக்கு புரிஞ்சிறும்..” என்று தீர்க்கமாக சொல்கிறார் ப்ரித்வி. இவ்வசனத்தை இந்த வாழ்க்கையின் குளறுபடிகளுக்குள் போட்டு குழப்பிக்கொள்ளாமல் “கேட்க நன்றாக இருக்கிற படியால்” ரசிக்கலாம்.
    பாஸ்கரின் பாத்திர படைப்பிற்காகவும், அப்பாத்திரத்தை மைய பாத்திரமான நாயகிக்கு அருகே, அதே அளவு கனத்துடன் படைத்த நேர்த்திக்காகவும் ராதாமோகனுக்கு என் ப்ரியங்கள்.
                                 நன்றி : அந்திமழை- நவம்பர்-2015

நாளை நமதே !

$
0
0
                    


சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில்
வண்டியைப் போட்டு விட்டு
பேருந்தேறினேன்.
இமயம் தொட்டுவிடும் தூரம் தான் !

ஊக்கமுடைமை

$
0
0
                  



உடல்முழுக்கச்  சிராய்த்துக்கொண்டு
மரமேற கற்றுக்கொண்டு விட்டேன்.
எவரேனும்
இந்த “ ஜெயக்கனியை” கண்டீரா?

ஊக்கமுடைமை

$
0
0

                  



அ)

சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்டில்
வண்டியைப் போட்டு விட்டு
பேருந்தேறினேன்.
இமயம் தொட்டுவிடும் தூரம் தான் !

ஆ)

   உடல்முழுக்கச்  சிராய்த்துக்கொண்டு
  மரமேற கற்றுக்கொண்டு விட்டேன்.
  எவரேனும்
  இந்த “ ஜெயக்கனியை” கண்டீரா?

இ )

       தொறந்தடிச்சு
       விழுந்ததொரு மதகரி
       தொட்டதோர் காணாக்கடி.

புண் உமிழ் குருதி - சுகுமாரன்

$
0
0

          




புதிய நூற்றாண்டில் நவீன தமிழ்க் கவிதையுலகுக்கு அறிமுகமான குறிப்பிடத்தக்க கவிஞர்கள் சிலரில் இசையும் ஒருவர். ஒருவர் மட்டுமல்ல. முக்கியமான ஒருவர். இசையின் கவிதைகளைத் தவிர்த்து விட்டு தற்காலக் கவிதை பற்றிய சித்திரத்தைத் தீட்ட முடியாது என்ற அளவுக்கு முக்கியமானவர்.

நவீன கவிதை உச்சநிலையிலிருந்த சென்ற நூற்றாண்டின் எழுபது எண்பதுகளில் அரங்குக்கு வந்த கவிஞர்களுக்கு இலக்கிய அடிப்படையிலான சலுகையொன்று இருந்தது. அதுவரை எழுதப்பட்டு உருவான கவிதை மொழியைப் பின் பற்றி தொடக்க காலக் கவிதைகளை எழுதி விட முடிந்தது.முன்னோடிக் கவிஞர் ஒருவரின் சாயலில் எழுதிப் பார்த்து விட்டுத் தன்னுடையதான பிரத்தியேக கவிதைமொழியை உருவாக்கிக் கொள்ள முடிந்தது. ஆத்மாநாமையே எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். ஆரம்ப காலக் கவிதைகளில் அன்று எல்லாரின் கவனத்துக்கும் உரியவராக இருந்த ஞானக்கூத்தனின் சாயல் தெரிந்தது. அவரது தொடக்க காலக் கவிதைகளில் ஒன்றான 'இன்னும்'என்ற கவிதையில் இதைப் பார்க்கலாம்.
'புறாக்கள் பறந்து போகும்
 கழுத்திலே வைரத்தோடு
 கிளிகளும் விரட்டிச் செல்லும்
 காதலின் மோகத்தோடு'என்று தொடங்கும் கவிதை பாடுபொருளிலும் கூறுமுறையிலும் பின்பற்றும் சந்த ஒழுங்கிலும் ஞானக்கூத்தன் கவிதைகளின் சாயலைக் கொண்டது என்பதை எளிதாகக் காணமுடியும். அந்தப் பாதிப்பிலிருந்து மிக விரைவில் விடுபட்டு தனது மொழியை, தனது உலகை முன்வைக்கும் தனது கவிதையைக் கண்டடைந்தார் என்பது வெளிப்படை. பின்வந்த கவிஞர்களில் சிலர் முன்மாதிரியாகக் கொள்ளும் கவிதைகளை உருவாக்கினார் என்பது உண்மை.

தொண்ணூறுகளில் எழுத வந்தவர்களுக்கு இந்தச் சலுகை அல்லது தேவை இருக்கவில்லை. படைப்பு சார்ந்த உரையாடல்களை விடக் கோட்பாடுகளை முன்னிருத்திய விவாதங்களே பொருத்தபாடுடையவையாக இருந்த அந்தக் காலப் பகுதி அதற்கான வாய்ப்பை அளிக்கவில்லை. முன்னோடியான கவிஞர்களின் கவிதையாக்கம் பற்றிய ஆக்கபூர்வமான உரையாடல்கள் நிகழாதிருந்த தருணத்தில் புதிய கவிஞன் தனக்கான கவிதையைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டான். இது ஒருவகையில் சுதந்திரம்; ஒருவகையில் சிக்கல். சுதந்திரமாக உணர்ந்த கவிஞர்கள் எந்த முன்மாதிரியுமில்லாத தமக்கான கவிதையை முன்வைத்தார்கள். சிக்கலாக உணர்ந்தவர்கள் வழித் தோன்றலான ( Derivative) கவிதைகளை உற்பத்தி செய்தார்கள். இன்றைய கவிதைப் பரப்பு பெரும்பாலும் வழித் தோன்றல் கவிதைகளின் கிடங்காக இருப்பது நடைமுறைச் சாபம்.

தொண்ணூறுகளின் பிற்பகுதியிலும் இரண்டாயிரத்தையொட்டிய முற் பகுதியிலும் அறிமுகமான கவிஞர்களிடம் ஒரு தொடர்ச்சியின்மை அல்லது புதிய ஆரம்பம் தென்படுகிறது. பெண்ணியக் கவிதைகள், தலித்தியக் கவிதைகள் இவற்றுக்கு முன் மாதிரிகள் இல்லை. இந்தச் செயல் அதுவரை ஆகி வந்த கவிதைப் போக்கையும் வலுவாகப் பாதித்தது. அந்தப் பாதிப்பை இந்தச் சுதந்திரமே அல்லது தொடர்ச்சியின்மையே சமன் செய்தது.  அதுவரை நிலுவையிலிருந்த கவிதையாக்க முறையுடன் கிஞ்சிற்றும் தொடர்பில்லாத புதிய கவிதைமொழியை முன்வைத்த முகுந்த் நாகராஜனை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். தொடர்ந்து எழுதி வந்த மூத்த கவிஞர்களின் கவிதைப் போக்கிலும் இது மாற்றத்தை ஏற்படுத்தியது. கலாப்ரியா, கல்யாண்ஜியின் அண்மைக் காலக் கவிதைகள் எடுத்துக் காட்டு.



இந்தத் தொடர்ச்சியின்மை வழங்கிய சுதந்திரமான இடத்தில் செயல்படுகிறவர் களையே இன்றைய கவிஞர்களில் முக்கியமானவர்களாகக் கருதலாம். அவர்களில் இசையும் ஒருவர். 'யாரைப் போலவும் அவர் எழுதவில்லை. இசை இசையைப்போல எழுதுகிறார். அதனாலேயே தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார்'என்ற பிரபஞ்சனின் நற்சான்று ( அந்தக் காலம் மலையேறிப் போனது - தொகுப்பின் முன்னுரை ) இந்த இடத்திலிருந்து ஆகி வந்த கூற்று என எண்ணலாம். இசையின் செயல்பாட்டுக் களம் இந்த இடம் என்று குறிப்பிடலாம்.

சை கவிதைகளின் முக்கியத்துவம் அவை எடுத்த எடுப்பிலேயே தற்காலக் கவிதைகளின் பொருத்தப்பாட்டுடன் வெளிப்பட்டன என்பது. அதிகம் யாருடைய கவனத்திற்கும் சென்றிராத அவரது முதல் தொகுப்பு 'காற்று கோதும் வண்ணத்துப் பூச்சி' ( 2002 ). அதில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் பெரும்பான்மையும் தற்காலக் கவிதையின் பொருத்தப்பாட்டில் அமைந்தவை. முற்காலக் கவிதைகளின் அலகுகளையோ அணிகளையோ ஏற்காதவை. நேரடியான மொழிதல் மூலம்  கவிதையானவை. 'நாளை என்பது...'என்ற கவிதையில் கவிதைக்குரிய எந்த அலகுகளும் இல்லை. உணர்வு சார்ந்த மொழிதல் மூலமே அந்த வரிகள் கவிதையின் முறுக்கைப் பெறுகின்றன.
நாளை என்பது
எவ்வளவு பெரிய நகைச்சுவை.
நாளை என்பது
எவ்வளவு பெரிய மடமை
நாளை என்பது
எவ்வளவு பெரிய பொய்.
இந்த வரிகளில் கவிதைச் செறிவூட்டப்பட்ட ஒரு சொல்லும் இல்லை. ஆனால் மொத்தத்தில் ஒரு கவிதையாக எழும்புகிறது.இது அவருடைய சிறந்த கவிதைகளில் ஒன்றல்ல; ஆனால் அவரது பிந்தையகவிதைகளின் இயல்பைச் சொல்லும் தடயங்கள் கொண்டது.

இசையின் இன்னொரு முக்கியத்துவம் அவரது கவிதைகள் நிகழ்காலத்தைச் சொல்லுபவை. கவிதை எப்போதும் நிகழ்காலம் சார்ந்ததுதான். எனினும் அது வெளிப்படும் விதத்தில் தற்காலம் சார்ந்ததாக மாறிவிடுகிறது. கவிஞன் தேர்வு செய்யும் சொற்கள், அவை உருவாக்கும் வரிகள். அவற்றில் ஆகத் தொகையான தொனிஆகியவற்றின் மூலம் அது நிகழ் காலத்தைப் பற்றிப் பேசினாலும் அதை விட நீட்சி கொண்ட தற்காலத்தைப் பேசுவதாக  மாறுகிறது.
'கட்டிப் பிடித்து முத்தமிடவா முடியும்.
காப்பி குடிக்கலாம் வா' என்ற தேவதேவன் கவிதை வரி ஒரு நிகழ்கால அனுபவம். ஆனால் அது கவிதையாக விரிந்த தற்காலத்துக்குரியதாகிறது. இது நிகழ்கால அனுபவம். ஆனால் அதைச் சொன்ன முறையில் தற்காலம் முழுவதற்கும் பொருந்தும் ஒன்றாக உருமாறுகிறது. நிகழ் காலத்தைக் கடக்கும் சொற்கள் மூலம் அந்தப் பொருத்தப்பாட்டைக் கைக்கொள்கிறது.

நிகழ்கால அனுபவங்கள்தாம் இசையின் கவிதைகளில்  இடம் பெறுகின்றன. அவை அந்த நிகழ்கால உணர்வுடனும் நிகழ்காலச் சொற்களுடனுமே அமைகின்றன. ஒரு நிகழ்காலத்தையே தற்காலமாக விரிக்கின்றன. 'டம்மி இசை'என்ற கவிதையின் முடிவு வரிகள் இப்படி. 'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் பிரபஞ்சத்துக்கு வெளியே இருக்கிறார்'. இது நிகழ்காலத்தின் தாக்கம் பெற்ற உணர்விலிருந்து நிகழ்காலச் சொற்களிலேயே அமைகிறது. இந்த நிகழ்காலத்தை நிகழ்காலமாகவே நிலைநிறுத்துகிறார் இசை. அதை நிலைநிறுத்துவதற்காக நிகழும் மொழியையும் அதற்கான பொழுதையும் அவற்றுடன் உறவு கொண்ட சம்பவங்களையுமே கவிதைகளில் கையாளுகிறார். துலக்கமாகச் சொன்னால், தமிழ் வாழ்வில் ஒருவன் எதிர்கொள்ளும் அனுபவங்களை அதன் பிசுக்குடனும் மெருகுடனும் கவிதைகளுக்குள் கையாளுகிறார். கவிதைக்கென்று செப்பனிடப்பட்ட சொற்களை இந்தக் கவிதைகள் அநேகமாக ஏற்றுக் கொள்வதில்லை. 'நைஸ்'என்று ஒரு கவிதைக்கு கவிதைத்தன்மையில்லாத தலைப்பை வைப்பது மட்டுமல்ல கவிதை முழுவதுமே 'நைஸ்'என்ற பிறமொழிச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்தக் கவிதையின் வரிகளில் ஒன்று இப்படி.
இந்த நைஸிற்குத்தான்
மணிமுடிகள் சரிந்தனவா?
முனிகள் பிறழ்ந்தனரா?'. இதை செம்மையான கவிதை மொழியாக்கி 'இந்த மென்மைக்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா? முனிகள் பிறழ்ந்தனரா?'என்று வாசிக்கும்போது அதில் குடியிருக்கும் கவிதை சொல்லாமல் விடை பெற்றுக் கொள்கிறது. இது மொழிசார்ந்த ஒன்றல்ல; கவிஞன் தனது நிகழ்காலத்தின் குரலுக்குச் செவிசாய்க்கும் செயல்.

சையின் கவிதைகள் நிகழும் இடங்களும் பிரத்தியேகமானவை அல்ல; பொதுவானவை. அங்கே நிகழ்பவற்றில் வெளித் தெரியாமலிருக்கும் பிரத்தியேகமான ஏதோ ஒன்றை வெளிக் கொணர்வதுதான் கவிதையின் செயலாகிறது. 'நல்லறம் வீற்றிருக்கும் டோக் நகர்'மதுரையின் ஒரு குடியிருப்பு. அங்கே மின் கம்பம் அறுபது டிகிரி சாய்ந்து வளைந்து வணக்கம் சொல்லும் விந்தைதான் கவிதையாகிறது. வாகனங்கள் விரையும் பெருஞ்சாலைக்கு எந்த கவிதை மகத்துவமும் இல்லை. டிரைவரின் கட்டளைக்குப் பணிந்து வழி வேண்டி நீளும் சாம்பற் கையின் அபிநயமே கவிதையின் கவனிப்புப் பொருளாகிறது. திரைப்படம் ஓடாத லட்சுமி டாக்கீஸ் , ஒரு புராதன கட்டடம்.இன்று தொழிற்கூடம். ஆனால் அதற்குள் பத்தினி ஒருத்தியின் இடைக்குரல் ஒலிப்பதனால் மட்டுமே அது கவிதைக்குரிய இடமாகிறது.



இசையின் கவிதையுலகம் தனிமையானதல்ல. சமகாலக் கவிதையில் இந்த அளவு மனிதர்கள் திரண்டிருக்கும் உலகம் வேறில்லை. சமகாலப் பண்பாட்டு உலகின் எல்லாப் பிரமுகர்களும் பிரமுகரல்லாதவர்களும் முண்டியடிக்கும் அரங்கு இது. சிவாஜி கணேசன், டி. ஆர். மகாலிங்கம். ஸ்வர்ணலதா, இளையராஜா, வாணிஸ்ரீ. க்ரிஸ் கெய்ஸ், அனுராதா ஸ்ரீராம், ஷகீலாக்களுடன் நச்சினார்க்கினியர், எச்.ஜி. ரசூல், கலாப்ரியா, கல்யாண்ஜி, லீனா மணிமேகலை, ஜான் சுந்தர், இளங்கோ கிருஷ்ணன்களும் கேரி பேக்கில் தேநீர் கொண்டு செல்லும் பைத்தியம், நிச்சலனத்தில் மல்லாந்திருக்கும் பாரதியின் பராசக்தியும் நிரம்பியிருக்கும் உலகம். அங்கே பல்ஸர்களும்  விமானங்களும் பறக்கின்றன. ஸ்கூட்டிகளும் படகுகளும் மிதக்கின்றன. ஒரு சொட்டு மௌனத்தால் நிரம்பும் கிணறும் காதல் ஏறியிறங்கி விளையாடும் மலையும் இருக்கின்றன. இதோ இருக்கிறேன் என்று எம்பிக் கையுயர்த்தும் குள்ளமான காதலும் நூற்றாண்டுப் பசியும் இருக்கின்றன. சமகால நவீன கவிதையில் மனிதர்களும் பொருட்களும் பொழுதுகளும் இடங்களும் திணிந்த பேருலகம் இசையுடையது.

அங்கதம் அல்லது பகடியே இசை கவிதைகளின் மைய உணர்ச்சி என்று சிலாகிக்கப்படுகிறது. இது உண்மை; அதே சமயம் உண்மையல்லாதது. இந்த நோக்கில் இசையின் கவிதைகளுக்குத் தமிழ்ப் புதுக் கவிதை மரபில் ஒரு தொடர்ச்சியைக் கண்டுபிடிக்க முடியும். சி.மணி. ஞானக்கூத்தன் கவிதைகளின் வரிசையில் வைத்துப் பார்க்கும்போது விட்டகுறைச் சாயலைக் காணலாம். சி.மணியின் அங்கதம் வெறும் இடித்துரைப்பு. ஞானக்கூத்தனின் அங்கதம் சமகால வாழ்வின் மீதான கவி விமர்சனம். ஆத்மாநாமின் ஓரிரு கவிதைகளில் மிளிரும் கண்ணீரின் பளபளப்புள்ள பகடியின் தூரத்துச் சொந்தம் இசையின் பகடி.
உங்கள் காலைத் தொழுகை முடிந்ததா?
அவ்வளவுதான் உம் உணவு
ஊர் சுற்றாமல் 
ஒழுங்காய்ப் போய்த் தூங்குங்கள் என்று கண்ணீர் பளபளக்கச் சொல்கிறது ஆத்மாநாமின் கவிதை.
உன் கண்ணில் நீர் வழிந்து
உன் நெஞ்சிலேயேதான் உதிரமும் கொட்ட வேண்டும்என்று தன் தலையை அரிந்து மடியில் போட்டுக் கொண்டு கோதி விடும்அபாயகரமான பகடிதான் இசையுடையது. எளிய வாழ்வின் சிக்கலான தருணங்களைத் தார்மீகச் சீற்றத்துடன் பார்க்கும் இன்றைய கவி மனதின் புண் உமிழ் குருதிதான் இசையின் கவிதை. அது வெறும் அங்கதமோ பகடியோ மட்டுமல்லவே?

                                          ( நன்றி : ஆத்மாநாம் விருது மலர்-2015)






பூசணி

$
0
0












உன்னித்தெழுந்த தடமுலைகள் இரண்டொடும்
ஆறாயிரத்தி சொச்சம் இராத்திரிகள்
கட்டிப்புரண்டாள்.
கடைசியில்
ஒரு கிழவனை வைத்து அவற்றை வென்றாள்
சீக்கிரமே தீர்ந்ததவன் சரப்புட்டி
விழித்தெழுந்த முலையிரண்டும்
ஆளுக்கொரு தோள் பற்றி
அவள் தலை மீதேறி
ஆட்டமாய் ஆட்டம் பேயாட்டம்...
ருசி கண்ட பூனை
சமயங்களில்
சங்கிலி பிணித்த யானை.
அவளுக்கும் வருகிறதொரு மார்கழி!
அவளும் வைக்கிறாள் பூசணி !

காப்பு

$
0
0



காலிடைச் சந்தில் புகுந்தாடி
அப்பாவின் நெற்றியில் இரத்தம் பெருக்கடித்த
பூனைக்குட்டிகளை
எங்காவது கொண்டு போய் தொலைத்துவிட்டு வரச்சொன்னாள் அம்மா.
ஒரு சிமெண்டு பையில் திணித்துக் கட்டினேன்.
அவிழ்த்தெறிந்தேன்
ஊர்க்கோடி வெளிக்காட்டில்.
ஓடிவந்து ஆளுக்கொரு காலாய் கட்டிக்கொண்டன.
பற்றி பற்றி மேலேறப் பார்த்தன.
உதறி வீசினேன்
விழுந்தெழுந்தபிறகு
அவற்றுக்கு எல்லாம் விளங்கி விட்டது.
எத்தனையோ முறை
கடவுளை நம்பிநம்பி ஏமாந்தவன் என்பதால்
இந்த முறை வானத்தை அண்ணாந்து பார்க்கவில்லை.
இரும்புருளிக் குண்டுகள் உருண்டோடும்
தண்டவாளத்திடம் சொல்லி விட்டு வந்தேன்
“ என் செல்வங்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்.....


எலும்புருக்கி

$
0
0
         

                    
 நீ அழைத்தது போலில்லை
நான் அழைத்தது போலில்லை
கூத்துமாக்கள் அழைப்பது போலில்லை
கதா விருந்துகளில் அபிநயப்பது போலில்லை
விஸ்வநாதன் அழைத்தது  போலவோ
கோவிந்தராஜன் அழைத்தது போலவோ இல்லை
இரவலர் நின்று அழைத்தது போலில்லை
புலவர்கள் ஏத்தியழைத்தது போலில்லை
முறுவல்கிருஷ்ணன் அழைத்தது போலில்லை
கதறி குந்தி அழைத்தது போலவும் இல்லை
எடுத்தோன்... கோர்த்தோன்... காத்தோன்
ஆரத்தழுவி 
அழைத்தோன் ஓர் அழைப்பு...
அது போலவும் இல்லை
க.................ர்.....................ணா.....”  என்று
ஒரு நாயனம் அழைத்தது

மலர்கள்

$
0
0
                                          
              


துருவேறிய சைக்கிளில்
மேற்கிலிருந்து கிழக்காக வந்தார்
ஆஸ்துமா பீடித்த ஒரு கிழவர்.
புதுயுகத்து ஊர்தியில்
புத்திளைஞனொருவன்
கிழக்கிலிருந்து மேற்காக போனான்.
தவறி விழும் மூச்சுக்களை
அள்ளிப்பிடித்த படியே
தூக்கிக் கொண்டிருக்கும்  சைடுஸ்டேண்டுக்கு
சைகை செய்தார் கிழவர்.
அப்போது
அவர் தலைக்கு மேல் நின்றிருந்த மஞ்சரளி செடிக்கு
ஒரு குடம் நீர் வார்க்கப்பட்டது
அப்போதே ஒரு பூவும் பூத்தது.
அந்த சைடுஸ்டேண்ட் மலருக்கு
சாட்சிமலர் நான்.
                              
                        நன்றி : ஆனந்தவிகடன்
                        

பூரண மகிழ்ச்சி

$
0
0
                           





கட்டக்கடைசியில் நான் உறுதிபூண்டு விட்டேன்
வாழ்வில்
இனி மகிழ்ச்சி மட்டும்தான் என்று.

கிடார் வாசிக்க
கிடார் தேவையில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.

புகைக்க நெருப்பு கட்டாயமில்லை

நாபிக்கமலத்தை நுனிநாக்கால் வருடுவதற்கு
நாபிக்கமலமோ நுனிநாக்கோ
அவசியமில்லை என்பதை அறிந்துகொண்டேன்.

மலையுச்சியில் நிலவொளியில் கிடக்க
மலையேற வேண்டியதில்லை.

புனலாட வேண்டும் என்று தோன்றிவிட்டால்
உடனே
ஆடைகளை களைந்து விட வேண்டியதுதான்
கடல்நீர் ஆவியாகி
பிறகு மேகமாகி
எப்போது அது மாரியாகி
எப்போது நமது ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுக்க?

 நான் உறுதிபூண்டு  விட்டேன்
இனி
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. பூரணமகிழ்ச்சி!
Viewing all 793 articles
Browse latest View live